பதிவு செய்த நாள்
25 அக்2018
11:05
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக்.,25) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளது. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாகவும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிய துவங்கி உள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி உள்ளது.
சென்செக்ஸ் 301 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 34,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 301.49 புள்ளிகள் சரிந்து 33,732.47 புள்ளிகளாகவும், நிப்டி 79.95 புள்ளிகள் சரிந்து 10,144.80 புள்ளிகளாகவும் உள்ளன. நிப்டி 10,200 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலோகம், வங்கித்துறை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் 1.85 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளன. பார்தி ஏர்டெல், இன்போசிஸ், வேதாந்தா, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3.71 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம் விப்ரோ நிறுவன பங்குகள் 1.73 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|