பதிவு செய்த நாள்
26 அக்2018
04:16
மும்பை : ‘வெல்ஸ்பன் இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராஜேஷ் மண்டேவாலா, மஹாராஷ்டிர மாநிலத்தில், 150 கோடி ரூபாயில், புதிய வீடு ஒன்றை வாங்க உள்ளார்.
தனியார் துறையைச் சேர்ந்த, ‘வெல்ஸ்பன் இந்தியா’ நிறுவனம், ஜவுளித் துறையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், மஹாராஷ்டிர மாநில தலைநகர், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது.இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராஜேஷ் மண்டேவாலா. இவர், மும்பையில், ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘வாத்வா’ குழுமம் புதிதாக கட்டும் அப்பார்ட்மென்டில், மேல் மூன்று தளங்களை, 150 கோடி ரூபாயில் வாங்க உள்ளார்.
இந்த மூன்று தளங்களிலிருந்தும், கடற்கரையின் அழகை ரசிக்கலாம். இதற்கான ஒப்பந்தம், சமீபத்தில், ‘வாத்வா’ குழுமத்துடன் கையெழுத்தானது. மூன்று தளங்களின் விலை, 127 கோடி ரூபாய். பத்திர பதிவு, ஜி.எஸ்.டி., உட்பட, இவற்றின் விலை, 150 கோடி ரூபாய்.வரும், 2023க்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு, ‘வெல்ஸ்பன் இந்தியா’ நிர்வாக இயக்குனர் ராஜேஷ் மண்டேவாலாவிடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்க, ‘வாத்வா’ குழுமம் மறுத்து விட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|