பதிவு செய்த நாள்
26 அக்2018
04:19
புதுடில்லி : ‘பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை, முதலீட்டாளர்கள், ‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ வாயிலாக எளிதாக பெறலாம்’ என, மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தை, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பிரபல தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ நிறுவனத்தின், ‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ வாயிலாக, பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை, முதலீட்டாளர்கள் எளிதாக பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம், பங்குகளின் விலை, பங்கு வெளியீடு, இயக்குனர்கள் கூட்டம், நிறுவனங்களின் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.ஆண்ட்ராய்டு மற்றும், ஐ.ஓ.எஸ்., பயனாளர்கள், ‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ மூலம் இந்த சேவையை பெறலாம்.
ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த சேவை, விரைவில், உள்ளூர் மொழிகளிலும் வழங்கப்படும்.‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’பில், பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை பெற, முதலீட்டாளர்கள், ‘டாக் டூ பி.எஸ்.இ.,’ அல்லது, ‘ஆஸ்க் பி.எஸ்.இ.,’ எனக் கூறினால் போதும். அது தொடர்பான அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|