பதிவு செய்த நாள்
26 அக்2018
04:23
புதுடில்லி : தங்கத்தின் விலை பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிகரித்து, ஆறாண்டு காணாத உயர்வை, நேற்று எட்டியது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில், சுத்த தங்கம், 10 கிராமின் விலை, 32 ஆயிரத்து, 625 ரூபாயை எட்டியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பின், சுத்த தங்கத்தின் விலை, இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. நவம்பர், 29ல், தங்கம் விலை, 32 ஆயிரத்து, 475 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆறாண்டுகளுக்கு பின், அந்த உச்சத்தை தாண்டி இப்போது, 32 ஆயிரத்து, 625 ரூபாயை எட்டிப்பிடித்துள்ளது.
பண்டிகை காலத்தை ஒட்டி, நகை வியாபாரிகள் அதிக அளவில் தங்கம் வாங்கி வருகின்றனர். மேலும், திருமண காலம் என்பதாலும், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருவதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர். சர்வதேச சந்தையிலும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மூன்று மாத உயர்வில், தங்கம் அங்கே விற்பனை ஆகிவருகிறது. டாலர் மதிப்பு சரிந்து வருவதும், பங்குகள் விலை சரிவாலும், தங்கம் மீதான முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உள்நாட்டை பொறுத்தவரை, ரூபாயின் மதிப்பு சரிவு, அனைவரது பார்வையையும், தங்கத்தின் பக்கம் திருப்பி வருகிறது. சிங்கப்பூரில் நேற்று, 1 அவுன்ஸ் தங்கம் விலை, 1,234.20 டாலராக அதிகரித்துள்ளது.
மும்பையில், 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 24 ஆயிரத்து, 800 ரூபாயாக நிலையான விலையில் வர்த்தகமானது.அதேசமயம், வெள்ளி விலை குறைந்துள்ளது. 1 கிலோ, 39 ஆயிரத்து, 600 ரூபாயாக சரிவடைந்தது.வெள்ளியை பொறுத்தவரை, தொழில் துறைக்கான தேவை குறைந்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|