அவந்தி பைனான்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆகிறார் ராகுல் குப்தா அவந்தி பைனான்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆகிறார் ராகுல் குப்தா ...  இந்தியாவில் நான்காவது தொழில் புரட்சி ஏற்படும்; மொபைல் காங்கிரஸ் துவக்க விழாவில் அம்பானி அதிரடி இந்தியாவில் நான்காவது தொழில் புரட்சி ஏற்படும்; மொபைல் காங்கிரஸ் துவக்க ... ...
தங்கம் விலை ஆறாண்டு காணாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2018
04:23

புதுடில்லி : தங்கத்தின் விலை பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிகரித்து, ஆறாண்டு காணாத உயர்வை, நேற்று எட்டியது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில், சுத்த தங்கம், 10 கிராமின் விலை, 32 ஆயிரத்து, 625 ரூபாயை எட்டியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பின், சுத்த தங்கத்தின் விலை, இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. நவம்பர், 29ல், தங்கம் விலை, 32 ஆயிரத்து, 475 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆறாண்டுகளுக்கு பின், அந்த உச்சத்தை தாண்டி இப்போது, 32 ஆயிரத்து, 625 ரூபாயை எட்டிப்பிடித்துள்ளது.

பண்டிகை காலத்தை ஒட்டி, நகை வியாபாரிகள் அதிக அளவில் தங்கம் வாங்கி வருகின்றனர். மேலும், திருமண காலம் என்பதாலும், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருவதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர். சர்வதேச சந்தையிலும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூன்று மாத உயர்வில், தங்கம் அங்கே விற்பனை ஆகிவருகிறது. டாலர் மதிப்பு சரிந்து வருவதும், பங்குகள் விலை சரிவாலும், தங்கம் மீதான முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உள்நாட்டை பொறுத்தவரை, ரூபாயின் மதிப்பு சரிவு, அனைவரது பார்வையையும், தங்கத்தின் பக்கம் திருப்பி வருகிறது. சிங்கப்பூரில் நேற்று, 1 அவுன்ஸ் தங்கம் விலை, 1,234.20 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பையில், 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 24 ஆயிரத்து, 800 ரூபாயாக நிலையான விலையில் வர்த்தகமானது.அதேசமயம், வெள்ளி விலை குறைந்துள்ளது. 1 கிலோ, 39 ஆயிரத்து, 600 ரூபாயாக சரிவடைந்தது.வெள்ளியை பொறுத்தவரை, தொழில் துறைக்கான தேவை குறைந்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)