பதிவு செய்த நாள்
26 அக்2018
12:19
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (அக்.,26)இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் காரணமாக சென்செக்ஸ் 297 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 10,100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 297.40 புள்ளிகள் சரிந்து 33,392.69 புள்ளிகளாகவும், நிப்டி 101.45 புள்ளிகள் சரிந்து 10,023.45 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகம், மின்துறை, கட்டுமானம், வங்கித்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் 1.63 சதவீதம் சரிவடைந்துள்ளன.
ஏசியன் பெயின்ட்ஸ், வேதாந்தா, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், கோல் இந்தியா, இன்போசிஸ், மாருதி சுசுகி, கோடாக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி லிமிடெட், எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன. அதே சமயம் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் 1.81 சதவீதம் உயர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|