பதிவு செய்த நாள்
27 அக்2018
02:51
புதுடில்லி : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான, பி.பி., நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும், 2 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை அமைக்க இருக்கிறது. விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் போடப்படும் என, தெரிகிறது.
இது குறித்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லண்டனை சேர்ந்த, பி.பி., நிறுவனமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் பலவற்றில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது, நாடு முழுக்க பெட்ரோல் நிலையங்களை அமைப்பது குறித்தான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம், 5 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை அமைப்பதற்கான உரிமம் உள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில், தற்சமயம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு, 6 சதவீதமாக உள்ளது. இதை இருமடங்காக அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்களை, பி.பி., நிறுவனத்துடன் இணைந்து அமைப்பது குறித்த பேச்சுகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|