பதிவு செய்த நாள்
27 அக்2018
02:55
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, ஊக்கச் சலுகைகள் அடங்கிய, பிரத்யேக செயல் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
இது குறித்து, டில்லியில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் மாநாட்டில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியதாவது:ஒரு நாட்டின் ஏற்றுமதி உயர்ந்தால், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். தயாரிப்பு துறை வளர்ச்சி பெறும். அதிக அளவில் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.
இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை பிரச்னையை சுலபமாக சமாளிக்கலாம். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, ஏற்றுமதியை மேம்படுத்துவது மிகவும் அவசியம்.நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.புதிய சந்தைஅதேசமயம், ஏற்றுமதியாளர்கள், சர்வதேச சந்தையில், கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.
பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள சில நாடுகள், ஏற்றுமதிக்கு அதிக சலுகைகள் வழங்குகின்றன. அந்நாடுகள், பிற நாடுகள் உடனான, தாராள வர்த்தக ஒப்பந்தம் மூலம், கவர்ச்சிகரமான விலையில்,பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.இத்தகைய போட்டியை எதிர்கொள்ளவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கச் சலுகையுடன் கூடிய சிறப்பு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளை அடையாளம் காண வேண்டும். ‘சார்க்’ மற்றும் ‘ஆசியான்’ நாடுகளில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை, தொழில் துறையினர் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா – அமெரிக்கா பரஸ்பர வர்த்தகம் தொடர்பான அனைத்து பிரச்னைககளுக்கும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நிதிச் சேவையில் ஈடுபட்டுள்ள அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் தகவல் சேமிப்பு, ‘சர்வர்’களை நிறுவுவது; தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை, அமெரிக்கா எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு, பேச்சு நடத்தி வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.
இம்மாநாட்டில், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனர், அலோக் சதுர்வேதி பேசியதாவது:பொறியியல், ரசாயனங்கள், ஜவுளி, மருந்து, நவரத்தினங்கள் – ஆபரணங்கள் உட்பட, பல முக்கிய துறைகளின் ஏற்றுமதி பிரச்னைகளுக்கு தீர்வு காண செயல் திட்டம் தயாராகி வருகிறது.
கியூபாசி.ஜி.எஸ்.டி., சட்ட திருத்தம் தொடர்பான பிரச்னைகள் சிலவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. போட்டி நாடுகளால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க, ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கச் சலுகை செயல் திட்டம் உதவும்.இதில், வரிச் சலுகை, சூடான், வெனிசுலா, கியூபா மற்றும் சுதந்திரமான காமன்வெல்த் நாடுகளின் பணப் பரிவர்த்தனைக்கு மாற்று வழி காண்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து வளர்ச்சிகடந்த, 2017- – 18ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 10 சதவீதம் உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலரை தாண்டியது.நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரை, ஏற்றுமதி, 12.5 சதவீதம் உயர்ந்து, 16,400 கோடி டாலராக உள்ளது. இது, முழு நிதியாண்டில், 34 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|