கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் ரூ.84 கோடி கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் ரூ.84 கோடி ...  பூர்விகா மொபைல்ஸ்  ரூ.5 கோடி பரிசு மழை பூர்விகா மொபைல்ஸ் ரூ.5 கோடி பரிசு மழை ...
வாகன தயாரிப்பு துறையில் 14.5 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2018
02:58

சென்னை : "இந்தியாவின் வாகன துறை, நடப்பு நிதியாண்டில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது," என, மத்திய அரசின் கனரக தொழில்துறையின், தேசிய வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி உட்கட்டமைப்பு திட்டத் துறையின் தலைமை செயல் அதிகாரி, நீதி சர்கார் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொடர்பான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.இக்கருத்தரங்கில், நீதி சர்கார் பேசியதாவது:உலக அளவில் வாகன விற்பனையில் இந்தியா, நான்காவது மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகன துறை 7.1 சதவீதத்துடன் மிக முக்கிய பங்களிப்பு வழங்குகிறது.

மேலும், நடப்பு நிதியாண்டில் வாகன துறையின் வளர்ச்சி, 14.5 சதவீதமாக உள்ளது. ஏப்., முதல் ஆக., வரையிலான காலகட்டத்தில் வாகன உற்பத்தி, 1.37 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1.19 கோடியாக இருந்தது.இதில், பயணியர் வாகன உற்பத்தி, 9.81 சதவீதம் வளர்ச்சியும், வணிக ரீதியிலான வாகன வளர்ச்சி 41.6 சதவீதமாகவும் உள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனை, 44.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி,11.50 சதவீதமாகவும், வாகன ஏற்றுமதி 26.96 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச அளவில் உள்ள முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. மத்திய அரசின் வாகன தொலை நோக்குத் திட்டம் – 2026ன் படி, உலக அளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில், 12 சதவீத பங்களிப்பு வழங்குவது, கூடுதலாக, 6.5 கோடி வேவலைவாய்ப்பு உருவாக்குவது ஆகியவையாகும்.

தற்போது, வாகன உற்பத்தி வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறை, உற்பத்தி மூலப் பொருள் மற்றும் செயல்முறை தொழில்நுட்பம், எடை குறைவு மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வாகனங்களை தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில், மாநாட்டு தலைவர், கஜனன், மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த தலைவர், வேலுசாமி, டாடா மோட்டார் நிறுவனத்தின் தலைவர், கஜேந்திரா சாண்டல், அசோக் லேலண்ட் தலைவர், நிதின் செத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)