மடங்கும் திரையுடன் சாம்சங் ஸ்மார்ட் போன் மடங்கும் திரையுடன் சாம்சங் ஸ்மார்ட் போன் ...  முதலீட்டு பார்வைகள் மாறும் முதலீட்டு பார்வைகள் மாறும் ...
ரிசர்வ் வங்கி அதிகாரத்தை குறைத்தால் ஆபத்து : மத்திய அரசுக்கு ஆர்.பி.ஐ., துணை கவர்னர் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2018
02:16

மும்பை,: ‘‘ரிசர்வ் வங்­கியை சுதந்­தி­ர­மாக செயல்­பட அனு­ம­திக்­காத எந்த அர­சும், உட­ன­டி­யா­கவோ, சில காலம் கழித்தோ, நிதிச் சந்­தை­யின் கோபத்தை சம்­பா­திக்க நேரி­டும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்­னர், விரால் ஆச்­சார்யா எச்­ச­ரித்­துள்­ளார்.
ரிசர்வ் வங்­கிக்­கும், மத்­திய அர­சுக்­கும் இடையே, சில பிரச்­னை­களில் உர­சல் போக்கு காணப்­ப­டு­கிறது.வங்­கி­க­ளின் வாராக் கடனை குறைக்க, கடு­மை­யான விதி­மு­றை­களை ரிசர்வ் வங்கி அமல்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும், அதிக வாராக் கடன் உள்ள சில வங்­கி­கள், தீவிர கண்­கா­ணிப்பு திட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.இத­னால், இவ்­வங்­கி­க­ளால் பிற வங்­கி­க­ளைப் போல, தாரா­ள­மாக கடன் வழங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது, தொழில் துறை வளர்ச்­சியை பாதிக்­கும் என, மத்­திய அரசு அஞ்­சு­கிறது.விரை­வில், பொதுத் தேர்­தலை சந்­திக்க உள்ள நிலை­யில், விதி­மு­றை­களை தளர்த்த, மத்­திய அரசு விரும்­பு­கிறது.அதை, ரிசர்வ் வங்கி கண்­டு­கொள்­ளா­மல் உள்­ளது.இது ஒரு­பு­றம் இருக்க, பணப் பரி­வர்த்­த­னை­களை கண்­கா­ணிக்­கும் அதி­கா­ரத்தை, ரிசர்வ் வங்­கி­யி­டம் இருந்து பிரித்து, தனி அமைப்­பின் கீழ் கொண்டு வர, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.இத­னால், வேக­மாக வளர்ந்து வரும் மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை சுல­ப­மாக கண்­கா­ணிக்க முடி­யும்.இந்த அமைப்­பின் தலை­வரை, ரிசர்வ் வங்­கி­யு­டன் கலந்­தா­லோ­சித்து, மத்­திய அரசு நிய­மிக்­க­லாம் என, உயர்­மட்­டக் குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.இதற்கு, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் தன் அதி­ருப்­தியை வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­துள்­ளார். ரிசர்வ் வங்கி கவர்­னர் தான், புதிய அமைப்­பின் தலை­வ­ரா­க­வும் இருக்க வேண்­டும் என, அவர் கூறி­யுள்­ளார். ரிசர்வ் வங்­கிக்கு, பொதுத் துறை வங்­கி­களை கட்­டுப்­ப­டுத்த, போதிய அதி­கா­ரம் இல்லை என்­றும் அவர் ஏற்­க­னவே குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தார். இத­னால், மத்­திய அர­சுக்­கும், ரிசர்வ் வங்­கிக்­கும் இடை­யி­லான மோதல் தீவி­ர­ம­டைந்­துள்­ளது.
இந்­நி­லை­யில், மும்­பை­யில், கருத்­த­ரங்கு ஒன்­றில், ரிசர்வ் வங்கி துணை கவர்­னர், விரால் ஆச்­சார்யா பேசி­ய­தா­வது: ரிசர்வ் வங்­கி­யின் சுதந்­தி­ரத்தை மதிக்­காத எந்த அர­சும், உட­ன­டி­யா­கவோ அல்­லது சிறிது காலம் கழித்தோ, நிதிச் சந்­தை­க­ளின் கோபத்தை சம்­பா­திக்க நேரி­டும். அது, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை தீக்­கி­ரை­யாக்­கும். அந்த நேரத்­தில், மிக முக்­கி­ய­மான ஒழுங்­கு­முறை அமைப்பை குறைத்து மதிப்­பிட்டு விட்­ட­தற்கு, அரசு வருத்­தப்­படும்.ரிசர்வ் வங்­கி­யின் அதி­கா­ரம், பொறுப்­பு­டைமை ஆகி­யவை குறைந்து, ஸ்தி­ர­மற்ற சூழல் நீடிக்­கு­மே­யா­னால், அது, நிதிச் சந்­தை­யில், கடன் பத்­திர வரு­வாய், அன்­னி­யச் செலா­வணி மதிப்பு ஆகி­ய­வற்­றில் பலத்த தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.அறி­வார்ந்த நாடு­கள், மத்­திய வங்­கி­க­ளுக்கு தேவை­யான சுதந்­தி­ரத்தை வழங்­கும். அதன் மூலம், கடன் செல­வைக் குறைத்து, சர்­வ­தேச முத­லீ­டு­களை நீண்ட காலத்­திற்கு ஈர்க்­கும்.அரசு கொள்­கைகள், நீண்ட கால பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என, ரிசர்வ் வங்கி கரு­தி­னால், அதை திட­மு­டன் எடுத்­துக் கூற வேண்­டும். ரிசர்வ் வங்கி, ஒரு நல்ல நண்­பன் போல, மத்­திய அர­சுக்கு பிடிக்­காத கசப்­பான உண்­மை­க­ளை­யும் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்க வேண்­டும். அதை விட்டு, ரிசர்வ் வங்­கி­யின் அதி­கா­ரத்தை குறைப்­பது ஆபத்­தில் தான் முடி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
டெஸ்ட் – ஒரு நாள் போட்டி : மத்­திய வங்­கி­களை, கிரிக்­கெட்­டில், ‘டெஸ்ட்’ போட்­டி­யில் பங்­கேற்­கும் அணி­க­ளாக கரு­த­லாம். அவை, வெற்­றிக்­காக, நின்று விளை­யா­டும்.ஆனால், மத்­திய அரசு துறை அதி­கா­ரி­கள், 20 ஓவர் ஒரு நாள் போட்­டி­யில் பங்­கேற்­கும் அணி­களை போல, உடனே பலன்­களை எதிர்­பார்த்து செயல்­ப­டு­வர்.
விரல் ஆச்சார்யா, துணை கவர்னர், ரிசர்வ் வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)