வாராக் கடனை சமாளித்து லாபம் காணும் வங்கிகள்வாராக் கடனை சமாளித்து லாபம் காணும் வங்கிகள் ...  அப்படியா...   அப்படியா... ...
முதலீடுகளில் இந்தியர்களுக்கு அதிக ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2018
00:05

ஆசிய பிராந்தியத்தில், பல்வேறு நிதியினங்களில் முதலீடு செய்து, அதிக வருவாய் ஈட்ட விரும்புவோரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க், வசதியான நுகர்வோர்கள், தனி நபர்கள் ஆகியோரின் முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த, 11 சந்தைகளில், 11 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.மியூச்சுவல் பண்டுஅதில், இந்தியாவில், 68 சதவீதம் பேர், தங்களுக்கு தேவையான நிதி வசதியை பெற, பல்வேறு முதலீட்டு திட்டங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இது, 57 சதவீத சராசரி அளவை விட அதிகம்.பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், யூனிட் டிரஸ்டுகள், முதலீடு சார்ந்த காப்பீட்டு திட்டங்கள், நிரந்தர வைப்பு முதலீடுகள், ஓய்வூதிய நிதியங்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்து நிதியங்களில், வசதி படைத்த இந்தியர்கள் முதலீடு செய்கின்றனர்.

நிதிவளத்தில் வேகமாக முன்னேறி வரும் வசதி படைத்தோரில், 31 சதவீதம் பேர், மியூச்சுவல் பண்டு முதலீடுகளை தேர்வு செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.நிரந்தர வருவாய் தரும் திட்டங்களில், 25 சதவீதத்தினரும், பங்குகளில், 22 சதவீதம் பேரும் முதலீடு செய்கின்றனர். இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும், சராசரிக்கும் அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த ஆய்வில், சராசரியாக, 16 சதவீதம் பேர் தான், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்கின்றனர். இது, நிரந்தர வருவாய் திட்டங்கள் மற்றும் பங்குகளில், சராசரியாக, முறையே, 19 மற்றும் 18 சதவீதமாக உள்ளது.கல்வி செலவுஒட்டுமொத்த ஆய்வில், குழந்தைகளின் கல்விச் செலவிற்காக முதலீடு செய்வதற்கு தான், மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். இதில், இந்தியாவும் விதி விலக்கல்ல.

இந்தியாவில், பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு வருவோர், பல்வேறு இலக்குகளை எட்டும் நோக்கத்தில் முதலீடு செய்கின்றனர். அவற்றுள், குழந்தைகளின் கல்விச் செலவினங்களை எதிர்கொள்வதற்கான முதலீடுகளுக்குத்தான் முதலிடம் அளிக்கின்றனர்.ஆசிய அளவில், வசதி படைத்தோரிடம் உள்ள முதலீட்டு ஆர்வம், இந்தியர்களை பொறுத்தவரை மிக அதிகமாக உள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு வரும் மக்கள், தங்கள் அந்தஸ்தை மேலும் உயர்த்திக் கொள்ள அதிக நாட்டம் காட்டுகின்றனர். அதனால், அவர்கள் முதலீடுகள் மூலம் வருவாயை பெருக்கும் வழிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள், கல்வி, வேலை, சொந்த வீடு என, அனைத்து அம்சங்களிலும், தங்கள் பெற்றோரை விஞ்சும் வகையில் முன்னேறி வருகின்றனர். இதற்கு, மின்னணு தொழில்நுட்பத்தில் பரவலான நிதிச் சேவைகள் கிடைப்பதும் முக்கிய காரணம்.

தற்போது, மொபைல் போன் வாயிலாகவே முதலீடு செய்யும் வசதிகள் பரவலாகி வருகின்றன. இவை, ஒருவரின் வசதியை, அடுத்த கட்டத்திற்கு சுலபமாக கொண்டு செல்ல உதவுகின்றன.ஷியாமல் சக்சேனா, தலைவர், சில்லரை விற்பனை பிரிவு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)