ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி ... எஸ்.பி.ஐ., ‘டெபிட் கார்டு’ புதிய உச்ச வரம்பு எஸ்.பி.ஐ., ‘டெபிட் கார்டு’ புதிய உச்ச வரம்பு ...
அலுமினியம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2018
23:33

புதுடில்லி : அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இது குறித்து, இத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுமினிய துறையில் உள்ளவர்கள், அரசிடம் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.வேதாந்தா நிறுவனத்தின் தலைவர், அனில் அகர்வாலும், அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது, அலுமினியத்துக்கு, 7.5 சதவீதமும்; அலுமினிய கழிவுகளுக்கு, 2.5 சதவீதமும், சுங்க வரியாக வசூலிக்கப்படுகிறது. வரியை அதிகரிப்பதன் மூலம், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் என்கின்றனர், கோரிக்கை வைப்பவர்கள்.

இந்தியாவில் மொத்த அலுமினிய உற்பத்தி, 40 லட்சம் டன்; நுகர்வு, 36 லட்சம் டன் ஆகும்.ஏற்கனவே அமெரிக்காவும், சீனாவும், அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்திய அலுமினிய கழகமும், சுங்க வரியை அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.

வாகன தயாரிப்பு, கட்டுமானம், நுகர்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில், அலுமினியம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைகள் அனைத்தும், இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான அலுமினியமும், நாட்டில் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அலுமினிய கழிவுகள் இறக்குமதி, 16 ஆயிரம் டன்னிலிருந்து, 36 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, சுங்க வரியை அதிகரிக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)