பதிவு செய்த நாள்
01 நவ2018
05:29
புதுடில்லி : ‘இந்தியா, அடுத்த, 10 ஆண்டுகளில், புதிதாக, 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ என, ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: இந்தியா, ஆஸ்திரேலிய மக்கள் தொகையைப் போல, ஐந்து மடங்கு அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை, அடுத்த, 10 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும். நாடு எதிர்கொள்ள உள்ள மிக முக்கிய சவால்களில், இதுவும் ஒன்று. தொலைநோக்கு பார்வை, உழைப்பு ஆகியவற்றின் மூலம் இதை சமாளித்தால், நாடு சிறப்பான வளர்ச்சி காணும்.
இதற்கு, வேலை செய்யும் ஆற்றல் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது முக்கியமாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.
63.5 சதவீதம் :
சர்வதேச அளவில், வேலை செய்யும் திறன் உள்ள மக்களின் எண்ணிக்கை, சராசரியாக, 63.5 சதவீதமாக உள்ளது. அதற்கேற்ப, இந்தியாவில் வேலை செய்யும் திறன் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள், சிறிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். அப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். உள்ளூரில் உள்ள திறமைசாலிகள், தொழில் முனைவோர்கள் மூலம், சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தினால், நிலையான வளர்ச்சி காணலாம். விளிம்பு நிலையினர் உட்பட, அனைத்து பிரிவிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க, ‘நாகரிக்’ என்ற ஐந்து அம்ச திட்டத்தை செயல்படுத்தலாம்.
தீர்வு :
இதன் மூலம், விவசாயம், வேளாண் பொருட்களை பதப்படுத்துதல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சுற்றுலா ஆகிய துறைகளில், வேலைவாய்ப்பிற்கான ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்கலாம். அரசு உதவியுடன், தனியார் துறையினருக்கு சந்தை வாய்ப்புகளையும், நிதி வசதியையும் ஏற்படுத்த இத்திட்டம் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|