பதிவு செய்த நாள்
01 நவ2018
10:41
மும்பை : நவம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று (நவ.,1) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதன் காரணமாகவும், சர்வதேச சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாகவும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 149.36 புள்ளிகள் உயர்ந்து 34,591.41 புள்ளிகளாகவும், நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 10,441.60 புள்ளிகளாகவும் உள்ளன. இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி, விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளன.
ஆசிய பங்குச்சந்தைகளில் ஹாங்காங், ஷங்காய், தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளும், அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|