இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 73.14இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 73.14 ...  ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் தலையிடக்கூடாது ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் தலையிடக்கூடாது ...
‘ஜிம் – 2’வில் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
23:37

ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு அதிக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க, தமிழக தொழில் துறை அமைச்சர் தலைமையிலான குழுக்கள், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றன.இதில், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வாகனத் துறைக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.இதே போன்று, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை, என, பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக, விமான உதிரி பாகங்கள் உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.


எதிர்காலத்தில், விமானங்களின் சேவை அதிகரிக்கும். இதை முன்னுணர்ந்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள, விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளோம்.ஸ்ரீபெரும்புதுாரில் ஏற்கனவே, விமான உதிரிபாக சோதனை மையம் உள்ளது. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் நிலையில், அதற்கான நிலம் உள்ளிட்ட வசதிகளை வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)