பதிவு செய்த நாள்
02 நவ2018
23:37
ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு அதிக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க, தமிழக தொழில் துறை அமைச்சர் தலைமையிலான குழுக்கள், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றன.இதில், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வாகனத் துறைக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.இதே போன்று, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை, என, பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக, விமான உதிரி பாகங்கள் உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.
எதிர்காலத்தில், விமானங்களின் சேவை அதிகரிக்கும். இதை முன்னுணர்ந்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள, விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளோம்.ஸ்ரீபெரும்புதுாரில் ஏற்கனவே, விமான உதிரிபாக சோதனை மையம் உள்ளது. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் நிலையில், அதற்கான நிலம் உள்ளிட்ட வசதிகளை வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|