‘ஜிம் – 2’வில் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் ‘ஜிம் – 2’வில் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் ...  வலைதள நிறுவனங்களின் அதிரடியால் மூடப்படும் மொபைல் போன் கடைகள் வலைதள நிறுவனங்களின் அதிரடியால் மூடப்படும் மொபைல் போன் கடைகள் ...
ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் தலையிடக்கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
23:48

வாஷிங்டன்:‘‘உலகில் எந்த ஒரு நாடும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது,’’ என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.


ரூபாய் வெளிமதிப்பின் தொடர் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பிரச்னையால், நிதிச் சந்தையில் குறைந்துள்ள பணப்புழக்கம் போன்ற சமீபத்திய பிரச்னைகளில், ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் மத்திய அரசு உள்ளது.இதற்கு, வர உள்ள பொதுத் தேர்தல் குறித்த அச்சமும் ஒரு காரணம் எனலாம்.


எனவே, முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க வருமாறு, மத்திய அரசு, முதன் முறையாக, ரிசர்வ் வங்கி சட்டம், பிரிவு – 7ஐ பயன்படுத்தி, மூன்று கடிதங்களை, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியது.இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், விரால் ஆச்சார்யா, ‘‘ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவது, நிதிச் சந்தையின் அழிவுக்கு வழி வகுக்கும்,’’ என, பகிரங்கமாக எச்சரித்தார்.


வாராக்கடன்



இதை தொடர்ந்து, ‘‘2008 -– 14 வரை, வங்கிகள் தாராளமாக வழங்கிய கடன்களை கண்காணிக்க, ரிசர்வ் வங்கி தவறியதால் தான், தற்போது வாராக் கடன் இந்த அளவிற்கு உயர்ந்தது,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.இந்த மோதலை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், பதவி விலக உள்ளதாக செய்தி வெளியானது. உடனே, ‘ரிசர்வ் வங்கி தனி அதிகாரத்துடன், எவ்வித தலையீடுமின்றி சுதந்திரமாக செயல்படுகிறது’ என, மத்திய அரசு தெரிவித்தது.


கண்காணிப்பு


இந்நிலையில், பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர், கெரி ரைஸ் கூறியதாவது:உலகில், எந்த நாடும், மத்திய வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. அதை, பன்னாட்டு நிதியம் எதிர்க்கும். பல நாடுகள், தற்போது மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் தலையிடத் துவங்கியுள்ளதால், இதை தெரிவிக்கிறேன்.மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என அறிவித்த போது, அதை, அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)