1,198 நிறுவனங்கள் மீது திவால்  நடவடிக்கை 1,198 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை ...  சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் சுவிட்ச் வேண்டாம் சொன்னாலே போதும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கணும்:ரிசர்வ் வங்கிக்கு அசோசெம் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
23:30

புதுடில்லி:‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 30,000 – 40,000 கோடி ரூபாய் வரை, கடனுதவி வரம்பை உயர்த்தி, நிதிச் சந்தையின் பணத் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு, ரிசர்வ் வங்கி தற்காலிக தீர்வு காண வேண்டும்’ என, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான – அசோசெம் வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து, இக்கூட்டமைப்பின் செகரட்டரி ஜெனரல், உதய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், கடன் தவணை செலுத்த தவறியது முதல், ரூபாய் வெளிமதிப்பு சரிவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் வரை, பல்வேறு காரணங்களால், நிதிச் சந்தையில், பணப்புழக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால், நிதிச் சந்தைகளில், மூலதன கடனுக்கான செலவு உயர்ந்து உள்ளது.


இதை குறைக்க, ரிசர்வ் வங்கி, உடனடியாக பணப்புழக்கத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.வட்டிரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைகளை தளர்த்தி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைத்தால், கடன் செலவு குறையும். முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை பெருகும்.மத்திய அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொடர்ந்து பல்வேறு முற்போக்கு கொள்கைகளை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.


இதன் விளைவாக, சுலபமாக தொழில் துவங்கும் நாடுகளில், இந்தியா, இந்தாண்டு, 100வது இடத்தில் இருந்து, 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்நிலையில், பண நெருக்கடியால், சில துறைகள், குறிப்பாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் இடையே, பாலமாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளன.


எனவே, இந்நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் சிக்கினால், அது, அடுக்கடுக்கான பாதிப்புகளுக்கு வித்திடும்.பொதுநலன் கருதியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ரிசர்வ் வங்கி, உடனடியாக நிதிச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.இதற்கு, ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 40 ஆயிரம்கோடி ரூபாய் வரை, கடனுதவி வரம்பை உயர்த்த வேண்டும்.


இதன் மூலம், பணப் புழக்க பிரச்னைக்கு, தற்காலிக தீர்வு காணலாம்.இது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதுடன், தயாரிப்பு, நுகர்பொருள், சிமென்ட், உருக்கு, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட இதர துறைகளின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் உதவும்.கடுமையான ஒழுங்குமுறையை பின்பற்றுவதில் கறாராக இருப்பதை விட, சூழலுக்கு ஏற்றார்போல, கொள்கைகளை தளர்த்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வங்கிகளுக்கு அனுமதி



முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் ஆகியவை வெளியிடும் கடன் பத்திர மதிப்பில், குறிப்பிட்ட அளவிற்கு உத்தரவாதம் அளிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வெள்ளியன்று அனுமதி வழங்கியது. இதனால், இந்நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்கும். நிறுவனங்களின் நிதி நெருக்கடி ஓரளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)