பதிவு செய்த நாள்
03 நவ2018
23:41
ஆவலுடன் எதிர்பார்த்த ஐபேடு புரோ, புதிய வடிவமைப்புடன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘பேஸ் ஐடி’ எனும் முகத்தை வைத்து அடையாளம் காணும் வசதியை, இந்த மாடலில் ஆப்பிள் அறிமுகம் செய்திருப்பது சிறப்பு.
வடிவமைப்பை பொறுத்துவரை, இதற்கு முன்பு ஓரங்கள் வளைவாக இருக்கும். இப்போது அப்படியின்றி, ஓரங்கள் நேரான செவ்வக வடிவில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. மெலிதானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஐபேடு புரோ, 11 இஞ்ச், 12.9 இஞ்ச் என, இரு விதங்களில் வந்துள்ளது. உள்ளீட்டு திறனை பொறுத்தவரை, 64/256/512 ஜி.பி., மற்றும் 1டி.பி., ஆகியவற்றில் கிடைக்கும். இன்னும் சரியான விலை; கிடைக்கும் நாள் ஆகியவை தெளிவுபடுத்தப்படவில்லை. 7ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிகிறது.
புதிய ஐபேடு புரோ, புதிய ஆப்பிள் பென்சிலுடன் வருகிறது. இருப்பினும் பென்சிலை தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்.இதில் சுவாரசியமான விஷயம், ஆப்பிள் பென்சிலை, ஐபேடு ஓரத்தில் இணைத்து வைக்கும்போது, ஒயர் இல்லாமலே சார்ஜ் ஆகிவிடும் என்பதுதான்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|