பதிவு செய்த நாள்
04 நவ2018
23:56
‘ஸ்மார்ட்போன்’ வாயிலாக, வங்கி கணக்கில் இருந்து எளிதாக பண பரிவர்த்தனை செய்ய உதவும், யு.பி.ஐ., செயலியில், நாள் ஒன்றுக்கு பத்து பரிவர்த்தனை மட்டுமே செய்யலாம் என, புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
யு.பி.ஐ., பரிவர்த்தனை மேடையை நிர்வகிக்கும், ‘நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன்’ இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் இருந்து ஒருவர் தினமும், 10, பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இது, 20 பரிவர்த்தனையாக இருந்தது.இந்த புதிய கட்டுப்பாடு, நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும், குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிற்கு மட்டுமே பொருந்தும். வேறு வங்கி கணக்கில் இருந்து பரிவர்த்தனைகளை இயக்கி கொள்ளலாம். எனவே, இரண்டு கணக்கு இருந்தால், 20 பரிவர்த்தனைகள் செய்யலாம்.அதே போல, வணிகர்கள் கணக்கிற்கான பரிவர்த்தனைக்கு இது பொருந்தாது. ‘பீம் செயலி’ மூலம் வணிகர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வகை பரிவர்த்தனை செய்யும் போது கட்டுப்பாடு இல்லை. ஆனால், வணிகர்கள் தனிநபர்களாக பதிவு செய்திருந்தால் கட்டுப்பாடு பொருந்தும்.உணவு சேவை நிறுவனங்கள், கால்டாக்சி நிறுவனங்கள் வணிகர்களாக பதிவு செய்திருப்பதால், இந்த சேவைகளை அணுக புதிய கட்டுப்பாடு பாதிக்காது.புதிய கட்டுப்பாட்டை மீறி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சிறந்த வசதியாக, யு.பி.ஐ., செயலி அமைகிறது.
இதில் பணம் பெறுபவரை பயனாளியாக சேர்க்காமலே, பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்பது சிறப்பம்சம். ஐ.எம்.பி.எஸ்., அல்லது, ‘நெப்ட்’ போன்ற வசதியை பயன்படுத்தும் போது, இது அவசியமாகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|