பங்கு வெளியீட்டில்  நியோஜென் கெமிக்கல்ஸ் பங்கு வெளியீட்டில் நியோஜென் கெமிக்கல்ஸ் ...  ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல் ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல் ...
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
01:00

புதுடில்லி : ‘மத்திய அரசின், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், உலகளவில் மின்னணு பணப் பரிவர்த்தனை, 1 சதவீதம் உயர்ந்துள்ளது’ என, கேப்ஜெமினி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பிரதமர் மோடி, 2016, நவ., 8ல், உயர்மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவித்தார். அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்நடவடிக்கை தோல்வி என, பெரும்பாலானோர் கூறுகின்றனர். இருந்த போதிலும், சர்வதேச மின்னணு பணப் பரிவர்த்தனை, எதிர்பார்த்ததை விட, 1 சதவீதம் அதிகரிக்க, மோடியின் நடவடிக்கை உதவியுள்ளது.கடந்த, 2016ல், சர்வதேச மின்னணு பணப் பரிவர்த்தனை, 9.1 சதவீதமாக வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது, 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.ரொக்கம் சாரா பரிவர்த்தனை, 33 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், டெபிட் கார்டு மற்றும் மொபல் வாலெட் பிரிவுகளின் வளர்ச்சி, முறையே, 76 மற்றும் 76.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 2016ல், மின்னணு பணப் பரிவர்த்தனையில், இந்தியா, 36 சதவீத வளர்ச்சியுடன், ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை விஞ்சி, 9வது இடத்தை பிடிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.உலக வங்கி அறிக்கைபணமதிப்பு நீக்க நடவடிக்கையில், பாதகத்தை விட, சாதகங்களே அதிகம். இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், சிறிதளவே குறைந்துள்ளது. முதல் அரையாண்டில், 7.3 சதவீத வளர்ச்சியில், 1 சதவீத அளவிற்கே, இரண்டாவது அரையாண்டில் குறைந்துள்ளது.அதேசமயம், அமைப்பு சார்ந்த துறையில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பதை தெளிவாக கணக்கிட முடியவில்லை. எனினும், அமைப்பு சார்ந்த துறையில், குறிப்பிட்ட பிரிவுகள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. நகர்ப்புற நடுத்தர மக்களுக்கு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வரி வசூல் அதிகரிப்புபணமதிப்பு நீக்க நடவடிக்கையால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை, 2016 -– 17ம் நிதியாண்டில், 25 சதவீதம் உயர்ந்து, 5.61 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 -– 18ம் நிதியாண்டில், சாதனை அளவாக, 6.92 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால், மத்திய அரசின் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)