ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா? ...  தங்கம் விற்பனை 10 சதவீதம் சரிவு தங்கம் விற்பனை 10 சதவீதம் சரிவு ...
தீபாவளி விற்பனை : 40 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
01:05

நாமக்கல்: தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு, கறிக்கோழி விற்பனை, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, 40 சதவீதம் உயர்ந்து, 2.50 கோடி கிலோ அளவுக்கு விற்பனையானது.தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.பண்ணை கொள்முதல்விலை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு -– பி.சி.சி., சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.வழக்கமாக, தீபாவளி நேரத்தில், கறிக்கோழி விற்பனை சூடுபிடிக்கும். கொள்முதல் விலை குறைந்ததால், கடைகளில் சில்லரை விலையும் அதிரடியாக சரிந்தது. அதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு நுகர்வு அதிகரித்தது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில், 1 கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை, 75 – 76 ரூபாய் என, இருந்தது. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி கடந்த வாரம், 79 – 80 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மேலும், கடந்த ஆண்டு, தீபாவளியை ஒட்டி, தமிழகம் முழுவதும், 1.70 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இந்த ஆண்டு, 40 சதவீதம் அதிகரித்து, 2.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அதேபோல், கறிக்கோழி உற்பத்தியும், 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கறிக்கோழி உற்பத்தியும், மக்களிடையே நுகர்வு அதிகரிப்பு காரணமாக, அதன் விற்பனையும் உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)