சிங்கப்பூரில் ஆர்.சி.இ.பி., வர்த்தக மாநாடு : வரி விலக்கு தீர்மானத்திற்கு இந்தியா ஒப்புதல் தருமா? சிங்கப்பூரில் ஆர்.சி.இ.பி., வர்த்தக மாநாடு : வரி விலக்கு தீர்மானத்திற்கு ... ...  கொள்முதல் விலை  சரிவால் அதிர்ச்சி கொள்முதல் விலை சரிவால் அதிர்ச்சி ...
அமெரிக்கா தொடர் நெருக்கடி ஏற்றுமதி சலுகையில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
23:53

திருப்பூர்:அமெரிக்காவின் தொடர் நெருக்குதலால், ஆயத்த ஆடை உட்பட, பல்வேறு வகை பொருட்களின் ஏற்றுமதிக்கான சலுகை உயர்வு, சிக்கலாகி உள்ளது.


உலக வர்த்தக அமைப்பு விதிப்படி, ஒரு நாட்டின் தனி நபர் வருவாய், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து, 1,000 டாலருக்கும் அதிகமாக இருந்தால், அந்நாடு, ஏற்றுமதிக்கு சலுகைகள் வழங்கக்கூடாது.அதன்படி, நம் நாட்டு ஏற்றுமதிக்கு, மத்திய அரசு வழங்கும் அனைத்து வகை சலுகைகளையும் நிறுத்த வேண்டும் என, உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா முறையிட்டது.


கடந்த, 2017 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது; அதன் தொடர்ச்சியாக, ஏற்றுமதி சலுகை விகிதத்தை மத்திய அரசு குறைத்தது.புகார் ஆயத்த ஆடை துறையை பொறுத்தவரை, 7.7 சதவீதம் வழங்கப்பட்ட, ‘டியூட்டி டிராபேக்’, ஜி.எஸ்.டி.,க்குப்பின், 2 சதவீதமாக குறைக்கப் பட்டது; 3.5 சதவீதமாக இருந்த, ‘ஸ்டேட் லெவிஸ்’ சலுகை, 1.7 சதவீதமாக குறைக்கப் பட்டது.


இதுகுறித்து, திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் கிரீஷ் கூறியதாவது:மத்திய அரசு, ஏற்றுமதி சலுகைகளை குறைத்து உள்ளது. ஆனால், உயர்த்தி வழங்குவதாக, உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா புகார் அளித்துள்ளது.இதற்கென அமைக்கப்பட்ட கமிட்டியிலும், இதே கருத்தையே அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் நெருக்கடியால், ஏற்றுமதி துறைக்கு நேரடி பயனளிக்கும் சலுகை வழங்க முடியாத நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆயத்த ஆடை துறையை பொறுத்த வரை, ஏற்றுமதி வளர்ச்சி பெற, சலுகைகள் மிக அவசியம்.எனவே, மத்திய அரசு, ஏற்றுமதி துறைக்கு, உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில், சலுகை திட்டங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)