பதிவு செய்த நாள்
12 நவ2018
00:25
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த வாரம், தொடர்ந்து, இரண்டாவது வாரமாக உயர்ந்து வர்த்தகம் ஆகின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, 6.3 சதவீதம், உயர்ந்து, கடந்த வார வர்த்தக முடிவற்றது.
கடந்த வாரம், புதிய சாம்வாட் ஆண்டு, 2075 துவகியது. சாம்வாட், 2074 ஆண்டில், நிப்டி, 4 சதவீதமும் சென்செக்ஸ், 7 சதவீதமும் அதிகரித்திருந்தது.தொழில்நுட்பத் துறை பங்கான இன்போசிஸ், 2.4 சதவீதமும், டாடா கன்சல்டன்சி நிறுவனம், 1.7 சதவீதமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 1.6 சதவீதமும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய பங்குச் சந்தைகள் கடந்த வெள்ளியன்று சிறிதளவு சரிந்து, வர்த்தகம் ஆனது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. இருப்பினும், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம், ஒரு பேரல், 60 அமெரிக்க டாலருக்கு கீழே வர்த்தகம் ஆனது. இது எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இறக்குமதி சுமையை குறைக்க உதவியது. மேலும், நம் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை சிறிதளவு முன்னேற்றம் காணப்படும் என்ற கருத்திலும் பங்குச் சந்தைகள் வலுப்பெற்றன.
அடுத்து நடைபெற உள்ள, ஐந்து மாநிலத் தேர்தல்கள் மற்றும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தும், சந்தையின் போக்கு அமையும்.இந்த வாரத்தை பொறுத்தவரை, பொருளாதார காரணிகள் சில வெளிவர உள்ளன. முதலில், அக்டோபர் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க விகிதம் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான தொழில் துறை வளர்ச்சி விகிதம் போன்றவை வெளிவர உள்ளன. மேலும், அக்டோபர் மாதத்திற்கான, மொத்த விலை பணவீக்க விகிதம், வரும் புதன் அன்று வெளிவர உள்ளது. இதன் முடிவுகளும் சந்தையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
கடந்த வாரம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையில், 157.8 கோடி மதிப்பிலான பங்குகளை கொள்முதல் செய்ததும், உள்நாட்டு முதலீட்டாளர்கள், 813.42 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொள்முதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி ரெசிஸ்டென்ஸ் 10,660 மற்றும் 10,710 ஆகும். சப்போர்ட் 10,430 ஆகும்.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|