ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.72.76ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.72.76 ...  பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள் ...
லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளுக்கு, ‘கிடுக்கிப்பிடி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
00:19

புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, லிக்யுட் மியூச்சுவல் பண்டு விதிகளை கடுமையாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், கடன் பத்திர முதலீடு, வட்டி ஆகியவற்றை குறித்த காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தரத் தவறியதால், அதை சார்ந்துள்ள நிதி, கட்டுமான நிறுவனங்கள், நிதிப் பற்றாக்குறையை சந்தித்துள்ளன.
இதையடுத்து, நிதிச் சந்தையில், பணப்புழக்கம் குறைவதை தடுப்பது குறித்து, நேற்று செபி ஆலோசனை குழு கூடி விவாதித்தது.இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:லிக்யுட் மியூச்சுவல் பண்டுகளில் திரட்டப்படும் நிதி, அரசு கருவூல பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில், குறுகிய கால அளவில் முதலீடு செய்யப்படுகிறது.இத்திட்டங்களில், விரும்பும் போது முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. அதனால், உள்நாடு அல்லது வெளிநாட்டு காரணிகளால், நிதிச் சந்தை தாக்கத்திற்கு உள்ளாகும் போது, அதிக முதலீடு வெளியேறுகிறது.இது, கடன் பத்திர சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பணப்புழக்க குறைவு, ரூபாய் வெளிமதிப்பு சரிவு போன்ற பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வரம்புஅதனால், லிக்யுட் பண்டு களுக்கு குறுகிய கால முதலீட்டு வரம்பு நிர்ணயிப்பது குறித்து, கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இந்த வரம்பு காலத்திற்குள், முதலீடுகளை திரும்ப எடுக்க முடியாது என்பதால், பணப்புழக்கத்தில் அதிக பாதிப்பு ஏற்படாது.அத்துடன், மியூச்சுவல் பண்டுகள் வெளியிடும், கடன் பத்திரங்களின் சந்தை மதிப்பு வெளியீட்டிற்கான வரம்பை, 60லிருந்து, 30 நாட்களாக குறைப்பது குறித்தும், விவாதிக்கப்பட்டது.இதனால், கடன் பத்திர மதிப்பில் வெளிப்படைத் தன்மையை அறிந்து, அதற்கேற்ப முதலீட்டு திட்டங்களை வகுக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)