பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள் ...  தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
00:23

புதுடில்லி, நவ. 13–‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ வாகனங்களின் விற்பனை, அக்டோபர் மாதத்தில் சரிவை சந்தித்ததால், அந்நிறுவன பங்குகள் விலை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது.இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளவிலான விற்பனை, 5.62 சதவீதம் அளவுக்கு, அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாவது:நிறுவனத்தின், ஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனையையும் சேர்த்து மொத்தம், 1 லட்சத்து, 9 ஆயிரத்து, 597 வாகனங்கள் அக்டோபர் மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன.இதுவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மொத்தம், 1 லட்சத்து, 3 ஆயிரத்து, 761 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.நிறுவனத்தின் அனைத்து பயணியர் வாகனத்தின் உலகளாவிய மொத்த விற்பனை, அக்டோபர் மாதத்தில், 65 ஆயிரத்து, 217 வாகனங்கள் ஆகும்.
இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு அக்டோபரில், 66 ஆயிரத்து, 361 வாகனங்கள் விற்பனையாகின.வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, அக்டோபரில், 44 ஆயிரத்து, 380 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.இருப்பினும், ஜாகுவார் லேண்டு ரோவர் சில்லரை விற்பனை, அக்டோபர் மாதத்தில், 4.6 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில், 5 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)