தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு ...  தங்கம் விலை உயர்வு தங்கம் விலை உயர்வு ...
சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
00:29

புதுடில்லி:கடந்த அக்டோபரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டு காணாத வகையில், 3.31 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:காய்கறிகள், பழங்கள், சமையல் உணவு வகைகள், புரதச் சத்து பொருட்கள் ஆகியவற்றின் விலை, அக்டோபரில் குறைந்து இருந்தது. அதனால், அம்மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 3.31 சதவீதமாக குறைந்தது.
இது, செப்டம்பரில், 3.70 சதவீதம்; கடந்த ஆண்டு, அக்டோபரில், 3.58 சதவீதமாக இருந்தது.சில்லரை பணவீக்கம், 2017, செப்டம்பரில், 3.28 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக காணப்பட்டது.அதன் பின், இந்தாண்டு, அக்டோபரில் தான், இந்த அளவிற்கு சற்று நெருக்கமாக, சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.செப்டம்பரில், காய்கறிகள் பணவீக்கம், மைனஸ், 4.15 சதவீதமாக குறைந்து இருந்தது. இது, அக்டோபரில், 8.06 சதவீதமாக சரிவடைந்துள்ளது.செப்டம்பரில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 0.51 சதவீதமாக உயர்ந்திருந்தது. இது, அக்டோபரில், மைனஸ், 0.86 சதவீதமாக காணப்பட்டது.இதே காலத்தில், பழங்கள் பிரிவின் சில்லரை பணவீக்கம், 1.12 சதவீதத்தில் இருந்து, 0.35 சதவீதமாக குறைந்து உள்ளது.
புரதச் சத்து நிறைந்த தானியங்கள், முட்டை, பால் மற்றும் இதர பொருட்களின் சில்லரை விலை பணவீக்கமும், சரிவைக் கண்டுள்ளது.அதேசமயம், அக்டோபரில், எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் சில்லரை விலை பணவீக்கம், 0.08 சதவீதம் அதிகரித்து, 8.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, செப்டம்பரில், 8.47 சதவீதமாக இருந்தது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மொபைல் போன், ‘ஆப்’மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம், மொபைல் போன், ‘ஆப்’ மூலம், மாதாந்திர சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிட திட்டமிட்டு உள்ளது.நுகர்வோர், பல்வேறு பொருட்களை வாங்க செலவிடுவது தொடர்பான ஆய்வறிக்கையை, அமைச்சகம் மாதந்தோறும் தயாரிக்கிறது. ஆய்வு மேற்கொண்ட கடைகளை உள்ளடக்கிய, நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகள், குத்துமதிப்பாக தேர்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு தேர்வு செய்த, 310 நகரங்கள், 1,181 கிராமங்களைச் சேர்ந்த, 1,114 சந்தைகளின் விற்பனை பொருட்கள் விலை அடிப்படையில், சில்லரை பணவீக்க புள்ளிவிபரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு அனைத்தும், வலைதளங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.தரவு பதிவு, பதிவேற்றம், கண்காணிப்பு ஆகிய பணிகளை, அரசின் இரு வலைதளங்கள் மேற்கொள்கின்றன.அடுத்து, இந்த ஆய்வில், மொபைல் போன் ஆப் பயன்படுத்தவும், ஆய்வுக்கான சந்தைகளை, 2,600 ஆக உயர்த்தவும், திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சில்லரை பணவீக்கம் குறித்து மேலும் துல்லியமான புள்ளி விபரங்களை பெறமுடியும்.
அடுத்த ஆண்டு, மொபைல் போன் ஆப் மூலம், புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும். இதற்கான தரவுகளை சேகரிக்க, தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.அடுத்து, மாநிலம் மற்றும் பிராந்திய சில்லரை விலை பணவீக்க விபரங்கள் வெளியிடப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)