பதிவு செய்த நாள்
13 நவ2018
00:33
புதுடில்லி, நவ. 13–சந்தையில் நேற்று, 10 கிராம் தங்கத்தின் விலை, 80 ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 32 ஆயிரத்து, 150 ரூபாயாக உயர்ந்தது.திருமண காலத்தை முன்னிட்டு, தங்கத்தின் தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்தது. வெளிநாட்டு சந்தைகளில், தங்கத்தின் விலை சரிவை சந்தித்த போதும், உள்நாட்டில் விலை அதிகரித்தது.
தலைநகர் டில்லியில், 99.9 சதவீதம் மற்றும் 99.5 சதவீதம் சுத்த தங்கத்தின் விலை, 10 கிராமுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, முறையே, 32 ஆயிரத்து, 150 ரூபாய் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்டியது.வெள்ளியின் விலையும், 1 கிலோவுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து, 150 ரூபாயாக உயர்ந்தது.
திருமண காலம் என்பதால், அதன் தேவைகளை முன்னிட்டு, ஆபரண தயாரிப்பாளர்கள், புதிதாக தங்கம் வாங்குவது அதிகரித்ததால், இந்த விலை உயர்ந்தது.மேலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 73.04 என்றானதால், தங்கம் இறக்குமதி விலையும் அதிகரித்தது. இது, உள்நாட்டு தங்கத்தின் விலையை அதிகரிக்க உதவியது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|