பதிவு செய்த நாள்
13 நவ2018
23:47
புதுடில்லி:'பிளிப்கார்ட்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
இது குறித்து, பிளிப்கார்ட் நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்திய, அமெரிக்காவின், 'வால்மார்ட்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:பின்னி பன்சால் மீது, தனிப்பட்ட ஒழுங்கின்மை தொடர்பாக புகார் வந்தது. இதை, அவர் வன்மையாக மறுத்துள்ளார்.எனினும், புகாரை விசாரிக்கும் பொறுப்பு, பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட்டுக்கு உள்ளதால், தனிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதில், பன்சால் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லையென்ற போதிலும், சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன.குறிப்பாக, ஒரு சூழலை, பின்னி பன்சால் கையாளும் விதத்தில், போதிய வெளிப்படைத் தன்மை இல்லாதது தெரிய வந்தது.இதன் காரணமாகவே, பின்னி பன்சாலின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னி பன்சால்,சச்சின்பன்சால் இணைந்து, 2007ல்,வலைதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும், பிளிப்கார்ட் நிறுவனத்தை துவக்கினர்.இந்நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கு, வால்மார்ட் சமீபத்தில் வாங்கியது.அப்போது, சச்சின் பன்சால், தன் பங்குகளை விற்று விட்டு வெளியேறினார்.
பின்னி பன்சால், தொடர்ந்து பிளிப்கார்ட்டில் நீடித்து வந்தார். இவர் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிளிப்கார்ட்டை யார் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|