பதிவு செய்த நாள்
14 நவ2018
23:09
புதுடில்லி:கடந்த அக்டோபரில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 5.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, செப்டம்பரில், 5.13 சதவீதமாக இருந்தது. இதற்கு முன், ஜூலையில், மொத்த விலை பணவீக்கம், 5.27 சதவீதம் என்ற அளவில், அதிகமாக இருந்தது.கடந்த, 2017, அக்டோபரில், மொத்த விலை பணவீக்கம், 3.68 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.பெட்ரோல்உணவுப் பொருட்கள் விலை குறைந்திருந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருந்த காரணத்தால், மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள், 1.49 சதவீதம் என்ற அளவில், பணவாட்டத்தை கண்டுள்ளன. இது, செப்டம்பரில், 0.21 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், காய்கறிகள் பணவாட்டம், 3.83 சதவீதத்தில் இருந்து, 18.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.எரிபொருள் மற்றும் மின் துறைகளின் பணவீக்கம், 16.65 சதவீதத்தில் இருந்து, 18.44 சதவீதமாக ஏற்றம் கண்டு உள்ளது.
இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, முறையே, 19.85 சதவீதம், 23.91 சதவீதம் மற்றும் 31.39 சதவீதமாக அதிகரித்துள்ளது.உணவுப் பொருட்களில், உருளைக்கிழங்கின் பணவீக்கம், 93.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், வெங்காயம், பருப்பு வகைகள் ஆகியவை, முறையே, 31.69 சதவீதம் மற்றும் 13.92 சதவீத பணவாட்டம் கண்டுள்ளன.
அக்டோபரில், சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டு காணாத வகையில், 3.31 சதவீதமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை அடிப்படையில், நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.நடப்பு 2018 – -19ம் நிதியாண்டில், அக்., – மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டில், சில்லரை பணவீக்கம், 3.9 – 4.5 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|