டி.சி.எஸ்.,சை பின்னுக்கு தள்ளியது, ‘ரிலையன்ஸ்’ டி.சி.எஸ்.,சை பின்னுக்கு தள்ளியது, ‘ரிலையன்ஸ்’ ...  கார்த்திகை மகா தீபத்துக்கு 3,500 கிலோ ஆவின் நெய் கார்த்திகை மகா தீபத்துக்கு 3,500 கிலோ ஆவின் நெய் ...
‘ஜபாங் – மைந்த்ரா’ இணைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2018
23:08

பெங்களூரு : ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் துணை நிறுவனங்களான, ‘ஜபாங், மைந்த்ரா’ ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன.

பிளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால், சில தினங்களுக்கு முன் பதவி விலகியதை அடுத்து, அந்நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை, தாய் நிறுவனமான, ‘வால்மார்ட்’ மேற்கொள்ள உள்ளது.அதில், முதல் நடவடிக்கையாக, ஜபாங் நிறுவனம், மைந்த்ரா நிறுவனத்துடன் இணைக்கப்படுகிறது. அத்துடன், ஜபாங் நிறுவனத்தின், 300 – -350 ஊழியர்களில், 140 பேருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஜபாங் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும், மைந்தராவுக்கு மாற்றப்படுகின்றன. எனினும், ஜபாங் வலைதளம் தொடர்ந்து செயல்பட்டு, அதில் வரும் விசாரணைகள், மைந்த்ராவுக்கு திருப்பி விடப்படும் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளிப்கார்ட் நிறுவனம் ஆடை, அழகு பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் மைந்த்ரா நிறுவனத்தை, 2014ல், 150 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதையடுத்து, இத்துறையில் மேலும் வலுவாக காலுான்ற, 2016ல், ஜபாங் வலைதள நிறுவனத்தை இணைத்துக் கொண்டது.வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிர்வாகத்தை சீர்திருத்தும் நோக்குடன், மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜபாங், மைந்த்ரா நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, திபன்ஜன் பாசுவும், பதவி விலகியுள்ளார். இந்நிலையில், மைந்த்ரா நிறுவனத்தில் இருந்து, தான் வெளியேற உள்ளதாக வெளியான வதந்திகளை, அதன் தலைமை செயல் அதிகாரி, அனந்த் நாராயணன் மறுத்துள்ளார். மைந்த்ரா, தொடர்ந்து தனி நிறுவனமாகவே செயல்படும் என, அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)