பதிவு செய்த நாள்
18 நவ2018
02:38
புதுடில்லி: அமெரிக்காவின், கூகுள் கிளவுட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, இந்தியரான, தாமஸ் குரியன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், 26ம் தேதி, இப்பொறுப்பை ஏற்பார் என, கூகுளின் தாய் நிறுவனமான, ஆல்பபெட் அறிவித்துள்ளது. பெங்களூரில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும், தாமஸ் குரியன், 22 ஆண்டுகளாக, ஆரக்கிள் நிறுவனத்தின் திட்ட மேம்பாட்டு பிரிவின், தலைவராக பணியாற்றி வந்தார்.இவர், ஆரக்கிள் செயல் தலைவர், லாரி எல்லிசனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், செப்டம்பரில், பதவி விலகினார். கூகுள் கிளவுட் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி, டயானா கிரீன், 2019 ஜனவரி வரை, தாமஸ் குரியனுடன் இணைந்து பணியாற்றி, முழு பொறுப்புகளை ஒப்படைத்து, வெளியேறுவார்.எனினும், அவர், ஆல்பபெட் இயக்குனர் குழுவில் நீடிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர், கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற போது, இரண்டு முக்கிய வாடிக்கையாளர்களுடன், சில, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் மட்டுமே, கிளவுட் சேவையை பயன்படுத்தின.இதை, டயானா கிரீன், 1,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளராக உயர்த்தினார். இவ்வளர்ச்சியை, தாமஸ் குரியன் மேலும் முன்னெடுத்துச் செல்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|