பதிவு செய்த நாள்
18 நவ2018
02:41
திருச்சி: சென்னையில், அடுத்த ஆண்டு ஜனவரி, 23, 24ம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, முதலீட்டாளர்கள் தேர்வுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கோவையில் கருத்தரங்கு நடத்தப்பட்டு உள்ளது.திருச்சியில் நேற்று நடந்த கருத்தரங்கில், இந்திய தொழில் கூட்டமைப்பு சேர்மன், அனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் பேசியதாவது:தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த, ‘நீட்ஸ்’ திட்டத்தின்படி, தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச கடன் உச்சவரம்பு, 1 கோடியில் இருந்து, 5 கோடி ரூபாயாகவும்; மானியம், 25 லட்சத்தில் இருந்து, 30 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்ட விதிகளின் அடிப்படையில், ஒற்றை சாளர தகவின் மூலம் இதுவரை, 211 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 150 விண்ணப்பங்களுக்கு, 419.3 கோடி ரூபாய் முதலீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொழில் துறை அமைச்சர், சம்பத் பேசியதாவது:இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.முதலீடுகளை ஈர்க்கும் திறனிலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய வகையில் முதலிடத்திலும், தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலும் தமிழகம் உள்ளது.ஒட்டுமொத்தமாக தொழில் வளர்ச்சி மற்றும் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.உலக அளவில் மிகச்சிறந்த, 500 தொழில் நிறுவனங்களில், 61 தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில்களை துவங்கியுள்ளன.கடந்த, 2015ம் ஆண்டு நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 98 தொழில் நிறுவனங்களில், 63 நிறுவனங்கள் தொழில் துவங்கி விட்டன.மேலும், 2019ல் நடைபெறும் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட முதலீடு, 10 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|