‘போஸ்ட் பெய்டு’ சேவைக்கு காகித ரசீது ரத்து? ‘போஸ்ட் பெய்டு’ சேவைக்கு காகித ரசீது ரத்து? ...  முதலீடு செய்ய தைரியம் வேண்டும் முதலீடு செய்ய தைரியம் வேண்டும் ...
தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2018
02:41

திருச்சி: சென்னையில், அடுத்த ஆண்டு ஜனவரி, 23, 24ம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, முதலீட்டாளர்கள் தேர்வுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கோவையில் கருத்தரங்கு நடத்தப்பட்டு உள்ளது.திருச்சியில் நேற்று நடந்த கருத்தரங்கில், இந்திய தொழில் கூட்டமைப்பு சேர்மன், அனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் பேசியதாவது:தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த, ‘நீட்ஸ்’ திட்டத்தின்படி, தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச கடன் உச்சவரம்பு, 1 கோடியில் இருந்து, 5 கோடி ரூபாயாகவும்; மானியம், 25 லட்சத்தில் இருந்து, 30 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்ட விதிகளின் அடிப்படையில், ஒற்றை சாளர தகவின் மூலம் இதுவரை, 211 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 150 விண்ணப்பங்களுக்கு, 419.3 கோடி ரூபாய் முதலீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொழில் துறை அமைச்சர், சம்பத் பேசியதாவது:இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.முதலீடுகளை ஈர்க்கும் திறனிலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய வகையில் முதலிடத்திலும், தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலும் தமிழகம் உள்ளது.ஒட்டுமொத்தமாக தொழில் வளர்ச்சி மற்றும் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.உலக அளவில் மிகச்சிறந்த, 500 தொழில் நிறுவனங்களில், 61 தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில்களை துவங்கியுள்ளன.கடந்த, 2015ம் ஆண்டு நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 98 தொழில் நிறுவனங்களில், 63 நிறுவனங்கள் தொழில் துவங்கி விட்டன.மேலும், 2019ல் நடைபெறும் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட முதலீடு, 10 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)