தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் ...  முதலீடு செய்ய தைரியம் வேண்டும் முதலீடு செய்ய தைரியம் வேண்டும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பண்டிகை கடனிலிருந்து மீளும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2018
04:06

தீபாவளி பண்டிகை உற்சாகத்தில், கணக்கு வழக்கு இல்லாமல் ஷாப்பிங் செய்து, அதன் காரணமாக, கடன் சுமை அதிகரித்திருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்:

முதலில் திட்டமிடாமல் அதிகம் செலவு செய்வதை உணர்ந்து, தற்போதைய நிலையை அலசி ஆராயுங்கள். அப்போது தான் தீர்வை அடையாளம் காண முடியும். கடன் தவணையை செலுத்த முடியாமல் திண்டாடுவது நல்லது அல்ல. கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், அதற்காக கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். ஒரு கடனை அடைக்க, இன்னொரு கடன் வாங்குவது சரியான வழி அல்ல.

உறவினர்கள் அல்லது நண்பர்களிடம், வட்டி இல்லாமல் அல்லது குறைந்த வட்டியில் பணம் பெற முயற்சிக்கலாம்.கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்கி குவித்திருந்தால், நிலுவையில் உள்ள தொகையை மாதத்தவணைக்கு மாற்றி சமாளிக்க முயற்சிக்கலாம். இதற்கான வட்டி விகிதம், வங்கிக்கு வங்கி வேறுபடக்கூடியது.

ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் இருந்தால், அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது இன்னும் சிக்கலானது.எனவே, செலவு அதிகமான கடனை கண்டறிந்து, அதை முதலில் அடைக்க முயற்சிக்க வேண்டும். மற்ற கடன்களை மறக்காமல், குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்டும்.செலவு மிக்க கடனை பைசல் செய்த பின், மற்ற கடன்கள் மீது கவனத்தை செலுத்தலாம்.

போனஸ் வடிவில் அல்லது பரிசுகள் வடிவில் உபரி பணம் இருந்தால், அதை கடனை அடைக்க பயன்படுத்தவும்.முதிர்வடையும் முதலீடு இருந்தால், அதை விலக்கி கடனை அடைக்கலாம். ஆனால், இதற்கான செலவு கணக்கையும் மனதில் கொள்ளவும்.முக்கியமாக உங்கள் பட்ஜெட்டை சீராக்கவும். அடுத்த பண்டிகைக்கு திட்டமிட்டு செலவு செய்ய உறுதி கொள்ளவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)