பதிவு செய்த நாள்
19 நவ2018
04:10
பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி தேவைக்காக, ஏதேனும் ஒரு வகையில் சேமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், உயர்கல்விக்கான நிதியை உருவாக்குவதில் சரியான திட்டமிடல் அவசியம். மேலும், பொருத்தமான முதலீட்டு வாய்ப்புகளையும் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான வழிகள்:
இலக்கு தேவை :
உயர் கல்விக்கான நிதியை உருவாக்குவதற்கான முதல் படி தெளிவான இலக்கு இருக்க வேண்டும். எந்த வகையான படிப்பு என்பதை தீர்மானித்து, அதற்கு ஏற்ப எதிர்கால மதிப்பு மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இலக்கை தீர்மானிக்க வேண்டும். இலக்கு அடிப்படையில் முதலீடு வாய்ப்பு அமைய வேண்டும்.
கல்வி கடன் சிறந்ததா?
உயர் கல்விக்கான திட்டமிடலை தாமதமாக மேற்கொள்ளும் பெற்றோர், போதிய நிதி கைவசம் இல்லாமல், தங்கள் ஓய்வு கால நிதியில் கை வைக்கின்றனர். ஒரு சிலர், வீட்டின் மீது கூட அடமானம் பெறுகின்றனர். ஆனால், இவற்றை விட கல்வி கடன் வசதியை நாடுவது ஏற்றதாக இருக்கும். வரிச்சலுகையும் பெற முடியும்.
ரியல் எஸ்டேட் எப்படி?
ஒரு சிலர் உயர் கல்விக்காக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். ஆனால், ரியல் எஸ்டேட் முதலீடு பல காரணங்களினால் பாதகமானது. பராமரிப்பு செலவு, சொத்து வரி போன்ற பலவித செலவுகள் உண்டு. மேலும் விரும்பிய நேரத்தில் விற்று பணமாக்குவது கடினம். இதற்கு பதில் பாலன்ஸ்டு பண்ட் முதலீட்டை நாடலாம்.
யூலிப் சரியா?
சைல்ட் யூலிப் அல்லது கல்விக்கான காப்பீடு திட்டங்களை நாடும் வழக்கமும் இருக்கிறது. ஆனால், இவை அடிப்படையில் காப்பீடு திட்டங்கள் என்பதால், உயர்கல்வி தேவைக்கு தவிர்க்கப்பட வேண்டும். மணிபேக் திட்டங்கள் கூட குறைந்த பலனையே அளிக்கின்றன. கல்வி செலவுக்கான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், அதிக பலன் அளிப்பவை.
பி.பி.எப்., தேர்வு :
செல்வ மகள் திட்டம், பி.பி.எப்., போன்ற திட்டங்களையும் பலர் நாடலாம். ஆனால், இவை அடிப்படையில் கடன்சார் முதலீடுகள். இவை முதலீடு, வட்டி மற்றும் முதிர்வில் வரிச்சலுகை அளிப்பது சாதகமாக அமையலாம். பணவீக்க தாக்கத்தை வெல்ல, இவை போதுமானதாக இருக்காது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|