தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் ...  முதலீடு செய்ய தைரியம் வேண்டும் முதலீடு செய்ய தைரியம் வேண்டும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2018
06:48

இந்­திய பங்­குச் சந்­தை­கள், தொடர்ந்து, மூன்­றா­வது வார­மாக உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கின்றன. சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்ணெய் விலை, கடந்த சில வாரங்­க­ளாக சரிந்து வந்­தது. இத­னால், எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வன பங்­கு­கள் விலை உயர்ந்­தது. மேலும், வங்­கிப் பங்­கு­களும் உயர்ந்­த­தன் கார­ண­மாக, பங்­குச் சந்தை உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.

கச்சா எண்­ணெய் விலை குறை­வால், நாட்­டின் இறக்­கு­மதி சுமை குறை­யும்; நடப்­புக் கணக்கு பற்­றாக்­கு­றை­யும் குறை­யும் என்ற எதிர்­பார்ப்­பி­லும், பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு இது சாத­க­மாக இருக்­கும் என்ற கணிப்­பி­லும், பங்­குச் சந்­தை­கள் வலுப்­பெற்­றன. எண்­ணெய் நிறு­வன பங்­கான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் மற்­றும் தனி­யார் வங்­கித்­துறை பங்­கான, எச்.டி.எப்.சி., பேங்க், ஹவு­சிங் டெவ­லப்­மென்ட் பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், பார்தி ஏர்­டெல் மற்­றும் ஜெட் ஏர்­வேஸ் போன்ற பங்­கு­கள் விலை உயர்ந்து காணப்­பட்­டன.

தொழில்­நுட்­பத் துறை­யைச் சேர்ந்த இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் பங்கு, அந்­நிர்­வா­கத்­தில் ஏற்­பட்ட மாற்­றம் கார­ண­மாக, விலை குறைந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது. டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, சில நாட்­க­ளாக வலுப்­பெற்று வரு­கிறது. இம்­மா­தம் ஆரம்­பத்­தில், அமெ­ரிக்க டாலர், 74 ரூபாய்க்கு மேல் வர்த்­த­கம் ஆகி­வந்த நிலை­யில், தற்­போது, 71.50 என்ற நிலைக்கு உயர்ந்­தது. இது­வும் பங்­குச் சந்­தை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது. மேலும், இந்­திய சேவைத் துறை­யின் வளர்ச்சி விகி­தம், சந்­தை­யின் வளர்ச்­சிக்கு ஒரு கார­ண­மாக அமைந்­தது. சேவை துறை­யின் வளர்ச்சி, 2016 அக்­டோ­பர் மாதத்தை விட உயர்ந்து காணப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்­தலை எதிர்­நோக்கி உள்ள நிலை­யில், அர­சின் திட்­டங்­கள் மற்­றும் இது­வரை செய்த சாத­னை­கள் குறித்த விளக்­கங்­களும், பல­த­ரப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பு­களும் வரும். மேலும், வர­வி­ருக்­கும், ஐந்து மாநி­லத் தேர்­தல்­கள் மற்­றும் அதன் முடி­வு­கள், 2019ல் நடை­பெற உள்ள லோக்சபா தேர்­த­லுக்கு வழி­வ­குக்­கும் என்­ப­தால், அது குறித்து, மிகுந்த எதிர்­பார்ப்பு நில­வு­கிறது. தேர்­தல்­கள் குறித்து, ஆளுங்­கட்­சிக்கு சாத­க­மா­க­வும் பாத­க­மா­க­வும், பல்­வேறு கருத்­துக்­க­ணிப்­பு­கள் வரும் சூழ­லில், சந்­தை­யில் அது குறிப்­பிட்ட தாக்­கத்தை நிச்­ச­யம் ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 10,750 மற்­றும் 10,810 ஆகும். சப்­போர்ட் 10,565 ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள் :பயோ­கான் கே.எஸ்.சி.எல்., பி.என்.பி.,விகார்டு கோத்­ரெஜ் புராப்­பர்ட்­டீஸ்


–முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)