பதிவு செய்த நாள்
19 நவ2018
06:50
கச்சா எண்ணெய்:
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில், தொடர்ந்து ஆறு வாரங்களாக சரிவில் இருந்து வந்தது. அதாவது, அக்டோபர் முதல் வாரம் துவங்கி, கடந்த வாரம் வரை சரிவு நிகழ்ந்துள்ளது. 2014ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட முதல் தொடர் சரிவு இதுவேயாகும். இதற்கு முக்கியமான காரணம், சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது ஆகும். மேலும் அமெரிக்கா, ஈரான் நாட்டின் மீது கொண்டுவந்த பொருளாதாரத் தடை மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடை ஆகியவற்றால், சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், விலை உயர்ந்து இருந்தது. ஆனால், கடந்த மாதம் இந்தியா உள்ளிட்ட சில முன்னணி நாடுகளுக்கு விதி விலக்கு அளித்து, ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யலாம் என, அமெரிக்கா அறிவித்ததும், விலை மளமளவென சரிய ஆரம்பித்தது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி, மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வந்த சூழலில், தற்போது, உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில், அந்நாடு முதல் நாடாக திகழ்கிறது. இரண்டாவதாக, சவுதி அரேபியாவும், மூன்றாவதாக, ரஷ்யாவும் அதிக உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன.
அமெரிக்காவின் தற்போதைய எண்ணெய் உற்பத்தி, வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது, தினசரி உற்பத்தி, 11.7 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உள்ளது. மேலும், அமெரிக்காவில் தற்போது இயங்கிவரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, 900 ஆகும். இது மார்ச், 2015ம் ஆண்டுக்கு பின் உள்ள உச்ச நிலையாகும். விலை சரிந்து வரும் இந்த சூழலில், சவுதி அரேபியா மற்ற உற்பத்தி நாடுகளுக்கு அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், டிசம்பர் மாதத்தில் எண்ணெய் உற்பத்தியை, 1.4 மில்லியன் பேரல்கள் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும் என்றது. இது உலக அளவிலான மொத்த சப்ளையில், 1.5 சதவீதம் ஆகும்.
இதன் காரணமாகவே, கடந்த வார இறுதி நாட்களில் விலை ஏற்றம் காணப்பட்டது. இருப்பினும், உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா, இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை என்று செய்திகள் வருகின்றன. ஒபெக் நாடுகளின் கூட்டமானது, டிச., 6ம் தேதி, வியன்னா நகரத்தில் நடைபெற உள்ளது. இதில், அடுத்த, ஆறு மாதங்களுக்கான திட்டம் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலையில், 54 டாலர்கள் என்பது, நல்ல சப்போர்ட் ஆகும்; 60 அமெரிக்க டாலர்கள் நல்ல ரெசிஸ்டென்ஸ் ஆகும்.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4070 3910 4190 4300என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 55.50 53.00 58.10 60.00
தங்கம், வெள்ளி:
தங்கம் மற்றும் வெள்ளி விலை, சர்வதேச சந்தையில், கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. வார ஆரம்பம் முதல், அனைத்து நாட்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் விலை ஏற்றம் காணப்பட்டது. ஒரு அவுன்ஸ் தங்கம், 30 அமெரிக்க டாலர் வரை கடந்த வாரம் அதிகரித்தது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கம், 1,222 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற, அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதம், வரும் டிசம்பர் மாதத்தில் உயர்த்தப்படுவதற்கு சாதகமான சூழல் இல்லை என்பதாக தெரியவந்தது. இதன் காரணமாக, சந்தையில், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு குறைந்தது. அதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தது.
பிளாட்டினம் விலை வரலாற்று உச்சத்தை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. பிளாட்டினத்துக்கான சுரங்க உற்பத்தி தடைபட்ட சூழலில், அதன் விலை அதிகரித்தது. பொதுவாகவே, தங்கத்தை பொறுத்தவரை, ஆபரண தேவையைக் காட்டிலும், அரசு மற்றும் மக்கள் மத்தியில் முதலீட்டு பொருளாகவே அது கருதப்படுகிறது. எனவே தான் வட்டி விகிதங்கள் உயரும்போது, அது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அரசு சார்ந்த கருவூலங்கள் மற்றும் பத்திரங்களின் ஆதாயம் அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டை குறைத்து, அரசு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்வர்.
இதற்கு மாறாக வட்டி விகிதம் குறையும்போது, தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்வர். எனவே தான் வட்டி விகிதம் குறித்த பேச்சுகள், எதிர்பார்ப்புகள், மாற்றங்கள் ஆகியவை, தங்கத்தின் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள, ‘ஜி-20’ நாடுகளின் மாநாட்டில், அமெரிக்க அதிபரும் சீனா அதிபரும் பங்கேற்க இருக்கின்றனர். இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தக மோதல் குறித்து, அப்போது பேச்சு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இவ்விரு நாடுகளுக்கிடையே சுமுகமான சூழல் நிலவும் என்ற கணிப்பும் உள்ளது. இவை சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயரக் காரணமானது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, 73 ரூபாயைக் கடந்து வர்த்தகம் ஆனது. இதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை அதிகமானது.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,910 30,700 31,170 31,400காம்எக்ஸ் (டாலர்) 1,218 1,209 1,226 1,235
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 36,700 36,230 37,090 37,470காம்எக்ஸ் (டாலர்) 14.10 13.85 14.55 14.80
செம்பு:
செம்பு விலையானது, முந்தைய சரிவில் இருந்து மீண்டு, கடந்த வாரம் அதிகரித்து வர்த்தகம் ஆனது. இவ்வாண்டின் துவக்கம் முதலாகவே, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக மோதலால், கடுமையான அளவு செம்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக, விலை சரிவில் இருந்து வந்தது. கடந்த வாரம், பொருள் வாணிப சந்தையில் இருப்பு விபரம், 10 மாதம் குறைவாக, அதாவது 5,425 டன் குறைந்து, 1,61,025 டன்களாக இருந்தது
இம்மாத இறுதியில் நடைபெற உள்ள, ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபரும், சீனா அதிபரும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தக மோதல் குறித்து பேச்சு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும், இவ்விரு நாடுகளுக்கிடையே சுமுகமான சூழல் நிலவும் என்ற கணிப்பும், சந்தையில் செம்பு விலை உயரக் காரணம் ஆனது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 439.50 435.00 443.00 450.00
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|