பதிவு செய்த நாள்
20 நவ2018
01:03
கொச்சி : இந்திய ஆயுர்வேத மருத்துவ துறை, இந்த ஆண்டு இறுதிக்குள், 30 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையாக வளர்ச்சியை எட்டும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய ஆயுர்வேத துறை சந்தை, 75 சதவீதம் தயாரிப்புகளாலும், 25 சதவீதம் சேவைகளாலும் அமைந்துள்ளது. நாட்டில், ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருவதால், இத்துறை வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் மொத்த ஆரோக்கிய துறை, 85 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையாகும். இதில் ஆயுர்வேத துறையின் பங்களிப்பு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இத்துறையானது, வரும் ஆண்டுகளில், இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும். உலகளவிலான சந்தையிலும் வளர்ச்சியடையும்.இத்துறையை பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. ஒன்று, போதுமான அளவுக்கு திறன் வாய்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இல்லாதது.
அடுத்து தரமான மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு. மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் தரம், ஒவ்வொரு தயாரிப்புக்கும் இடையே மிகவும் வேறுபடுகிறது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவிலான, ஆயுர்வேத மாநாடு கொச்சியில், 21 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|