பதிவு செய்த நாள்
20 நவ2018
01:06
புதுடில்லி : ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், மொத்த ஸ்கூட்டர் விற்பனை, 2.5 கோடி என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த உதவி தலைவர், யாதவிந்தர் சிங் கூறியதாவது:நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர், இந்தியாவில், 2001ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 13 ஆண்டுகளில், 1 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.ஆனால், இந்த சாதனையை, அடுத்த மூன்றே ஆண்டுகளில் முறியடித்து, மேலும், 1 கோடி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. அடுத்து ஓராண்டுக்குள்ளாகவே கூடுதலாக, 50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளோம்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், அன்புமே எங்களது இந்த வளர்ச்சிக்கு காரணம். அடுத்த கட்டமாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் எங்கள் முயற்சிகளை துவங்கி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஸ்கூட்டர் சந்தையில், 57 சதவீதம்,ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனத்தின் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|