பதிவு செய்த நாள்
20 நவ2018
23:24
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான, விட்டாரா பிரெஸ்ஸா காரின் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையை குறைப்பதற்காகவே, இந்த உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனம் மேலும் அறிவித்துள்ளதாவது: நிறுவனம், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 94 ஆயிரம் வாகனங்களை தயாரித்துள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகமாகும்.
தற்போது விட்டாரா பிரெஸ்ஸா காருக்கான காத்திருப்பு காலம், 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகின்றன; இது குறைக்கப்படும்.கடந்த நிதியாண்டில், 1 லட்சத்து, 48 ஆயிரம் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 95 ஆயிரம் விட்டாரா கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட, 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை, 3.57 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.இவ்வாறு மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|