பதிவு செய்த நாள்
20 நவ2018
23:29
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்கின், தனி இயக்குனர் பதவியில் இருந்து, ரென்டாலா சந்திரசேகர் விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக, ராஜினாமா செய்துள்ளார் என, தகவல் வெளியாகியுள்ளது.
இவரையும் சேர்த்து, ஒரே வாரத்தில், இவ்வங்கியில் இருந்து, மூன்று இயக்குனர்கள் வெளியேறி உள்ளனர்.கடந்த, 14ல், இவ்வங்கியின் செயல் சாரா தலைவர், அசோக் சாவ்லா விலகினார். ‘ஏர்செல் – மேக்சிஸ்’ முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தன் பெயர் இடம் பெற்றதால், அசோக் சாவ்லா பதவி விலகினார்.
அன்றே, யெஸ் பேங்க், ‘ஆடிட்’ குழு தலைவரும், தனி இயக்குனருமான, வசந்த் குஜ்ராதியும் ராஜினாமா செய்தார்.அடுத்து, 16ம் தேதி, வங்கியின் தனி இயக்குனரும், எஸ்.பி.ஐ., முன்னாள் தலைவருமான, ஓ.பி., பட், பதவி விலகினார். நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது.
அவர், எஸ்.பி.ஐ., தலைவராக இருந்தபோது, விஜய் மல்லையாவின், ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு அளித்த கடன் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணையில் சிக்கியுள்ளது தான், முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.யெஸ் பேங்க் தனி இயக்குனர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருவதால், அவ்வங்கிப் பங்கின் விலை சரிந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|