பதிவு செய்த நாள்
21 நவ2018
23:12
புதுடில்லி : மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும், புலனாய்வு அமைப்பு, ஏப்ரல் – அக்டோபர் வரையிலான, ஏழு மாதங்களில், 29,088 கோடி ரூபாய் மதிப்பிலான, வரி ஏய்ப்பை கண்டுபிடித்துள்ளது. இதில், ஜி.எஸ்.டி.,யில், சரக்கு பிரிவில், 571 கணக்குகளில், 4,562 கோடி ரூபாய் மதிப்பிற்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளது.
சேவைப் பிரிவில் தான் மிக அதிகமான அளவிற்கு, வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது. இதில், 1,145 கணக்குகளில், 22,973 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் வரி தொடர்பாக, 119 கணக்குகளில், 1,553 கோடி ரூபாய் வரி செலுத்தாமல் இருந்தது, தெரியவந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், வரி அதிகாரிகள், 5,427 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொகையை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து, வசூலித்துள்ளனர். இதில், ஜி.எஸ்.டி., சேவை வரி, மத்திய கலால் வரி ஆகியவற்றின் பங்கு, முறையே, 3,124 கோடி, 2,174 கோடி மற்றும் 128 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய அரசு, வரி ஏய்ப்பை தடுக்க, ஜி.எஸ்.டி., ஆணையத்தில், நீரஜ் பிரசாத் தலைமையில், புலனாய்வு பிரிவை அமைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|