பதிவு செய்த நாள்
21 நவ2018
23:18
புதுடில்லி : இந்தியாவில் கம்ப்யூட்டர் சந்தை, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, இரண்டாவது காலாண்டில், 20.2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக, ஐ.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கம்ப்யூட்டர் சந்தை குறித்து ஆய்வு செய்து, ஐ.டி.சி., நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கம்ப்யூட்டர்சந்தை, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 20.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இக்காலகட்டத்தில், 27 லட்சம் கம்ப்யூட்டர்கள், சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், கம்ப்யூட்டர் விற்பனையானது, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 10.6 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.இரண்டாவது காலாண்டில் வர்த்தக ரீதியிலானவர்கள், 12.25 லட்சம் கம்ப்யூட்டர்களையும்; சாதாரண நுகர்வோர், 14.45 லட்சம் கம்ப்யூட்டர்களையும் வாங்கி உள்ளனர்.வரும் நாட்களில், ‘இன்டெல் – சிப்’ தட்டுப்பாட்டாலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்துக்கு பிறகான மந்தநிலையாலும், கம்ப்யூட்டர்கள் விற்பனை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்.பி., நிறுவனம், 30.7 சதவீதம் அளவுக்கு சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ‘டெல்’ நிறுவனம், 22.9 சதவீதத்துடனும், ‘லெனொவோ’ நிறுவனம், 21.3 சதவீதத்துடனும், ‘ஏசர்’ 12.1 சதவீத சந்தை பங்களிப்புடனும் உள்ளன.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|