பதிவு செய்த நாள்
21 நவ2018
23:20
புதுடில்லி : ‘இன்போசிஸ்’ நிறுவனம், ஆஸ்திரேலியாவில், 3 ஆராய்ச்சி மையங்களை அமைப்பதன் மூலம், 1,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், ஆஸ்திரேலியாவில், 3 ஆராய்ச்சி மையங்களை அமைக்கப் போவதாகவும், 2020ம் ஆண்டில், இதன் மூலம், 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே அமெரிக்காவில் இதே போன்றதொரு ஆராய்ச்சி மையத்தை அமைப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள், 10 ஆயிரம் உள்ளூர் ஊழியர்களுக்கு அதன் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தில் பணியமர்த்தப்படுபவர்களில், 40 சதவீதம் பேர், ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பட்டதாரிகளாக இருப்பர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப்படும் என, ‘இன்போசிஸ்’ தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதற்காக எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட உள்ளது என்பது குறித்து, இந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து, தலைமை செயல்பாட்டு அதிகாரி, பிரவின் ராவ் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில், எங்கள், 20 ஆண்டு கால பயணத்தில், இந்த அறிவிப்பு மிக முக்கியமான மைல்கல் ஆகும். இந்த முயற்சியால், நிறுவனத்துக்கு வலுவான அடித்தளமும், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றிலான தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|