அப்படியா அப்படியா ...  டிஸ்கவர் – 100 சி.சி., அறிமுகத்தில் தவறு செய்து விட்டேன்: ராஜீவ் பஜாஜ் டிஸ்கவர் – 100 சி.சி., அறிமுகத்தில் தவறு செய்து விட்டேன்: ராஜீவ் பஜாஜ் ...
போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு அதிகரித்து வரும் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2018
23:31

புதுடில்லி : மொபைல் போன் உதிரிபாகங்கள் தயாரிப்பில் செய்து வரும் முதலீடு, மார்ச்சுக்குள், 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என, ஐ.சி.இ.ஏ., எனும், இந்திய மொபைல் மற்றும் மின்னணுவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஐ.சி.இ.ஏ., அமைப்பின் தலைவர், பங்கஜ் மொகிந்ரூ கூறியுள்ளதாவது: இந்த துறையில், ஒரு சில தொழிற்சாலைகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது, 268 தொழிற்சாலைகள் இருக்கின்றன. 2025ம் ஆண்டிற்குள், 1,800 தொழிற்சாலைகளாகவும், 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாகவும் நிலைமை உயரும்.

வரும் மார்ச் மாதத்திற்குள், ‘பிரின்டட் சர்க்யூட் போர்டு அசெம்ப்ளி, மொபல் போன்’ உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் மொத்த முதலீடு, 10 ஆயிரத்து, 500 கோடி முதல், 14 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், 4.5 லட்சமாக இருந்தது; தற்போது, 6.7 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடும் போது, மிகப்பெரிய வளர்ச்சியை காண முடிகிறது. கடந்த நிதியாண்டில், 59 ஆக இருந்த மொபைல் போன் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை, இப்போது, 127 ஆக அதிகரித்துள்ளது. மொபைல் போன் பேட்டரி தயாரிப்பை பொறுத்தவரை, 20 நிறுவனங்கள் இருந்தது, 65 ஆக மாறியுள்ளது. மொபைல் போன் சார்ஜர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும், 27லிருந்து 130 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த நிதியாண்டில், 1.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 225 வகையான மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இத்தகைய வளர்ச்சியை, உலக நாடுகள் எதுவுமே அடைந்ததில்லை. மொபைல் போன் நிறுவனங்கள், 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு வேண்டி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)