பதிவு செய்த நாள்
22 நவ2018
23:33
மும்பை : ‘‘என் தொழிலில், நான் செய்த மிகப் பெரிய தவறு, டிஸ்கவர் – 100 சி.சி., மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது தான்,’’ என, ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராஜீவ் பஜாஜ், வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:நல்ல மைலேஜுடன் சுகமான சவாரிக்கும் முக்கியத்துவம் அளித்து, புதிய சிந்தனையில், டிஸ்கவர் – 125 சி.சி., மோட்டார் சைக்கிளை சந்தைப்படுத்தினோம். பிரமாதமான வரவேற்பு கிடைத்தது; விற்பனை அதிகரித்தது.உடனே, பேராசை வந்தது. இதன் விற்பனையே இந்த அளவிற்கு இருந்தால், 100 சி.சி., மோட்டார் சைக்கிள் எந்த அளவிற்கு விற்பனையாகும் என, சந்தைப் பிரிவினர் கூறினர்.
உடனே, டிஸ்கவர் – 100 சி.சி., மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினோம். இது தான், என் தொழிலில் நான் செய்த மிகப் பெரிய தவறு. இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியதால், சந்தையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டோம். ஐந்து ஆண்டுகளுக்கு பின், செயல்பாட்டிலும் பின்தங்கி விட்டோம்.
மின் வாகனம் :
ஆனாலும், இன்றும், நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு, 2007ல், கே.டிஎம்., மோட்டார் சைக்கிளில் செய்த முதலீடு உதவியது. அப்போது, 65 ஆயிரமாக இருந்த, இதன் விற்பனை, தற்போது, 2.70 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதே காலத்தில், போட்டி நிறுவனமான, ‘ஹார்லி டேவிட்சனின்’ விற்பனை, 3.50 லட்சத்தில் இருந்து, 2.40 லட்சமாக குறைந்துள்ளது.அடுத்த ஆண்டு, மின்சாரத்தில் இயங்கும், இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|