பதிவு செய்த நாள்
22 நவ2018
23:36
புதுடில்லி : ‘வோடபோன் – ஐடியா’ நிறுவனத்தின் தலைவர், குமார் மங்கலம் பிர்லா, நேற்று தொலை தொடர்பு துறை செயலர், அருணா சுந்தர்ராஜனை சந்தித்தார்.
குமார் மங்கலம் பிர்லாவுடன், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரான, ஹிமன்ஷு கப்பானியா ஆகியோரும் வந்திருந்தனர். இந்த சந்திப்பு, 30 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசப்பட்டது குறித்து பிர்லா, செய்தியாளர்களிடம் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.
தொலை தொடர்பு துறை சார்ந்தவர்களுக்கும், அமைச்சகத்துக்கும் இடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இது, இரண்டாவது சந்திப்பு ஆகும்.இந்த சந்திப்புக்கு முன், தொலை தொடர்பு நிறுவனங்கள் பணப்புழக்கத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், வாங்கிய கடன்களை அடைப்பது கஷ்டமாகி வருவதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமை தொகை அதிகமாக இருப்பதாகவும் பிர்லா தெரிவித்திருந்தார்.
மேலும், முகேஷ் அம்பானியின், ‘ஜியோ’ நிறுவனத்தின் சலுகை மற்றும் போட்டியால், கட்டணங்கள் மூலமான வரவு குறைந்து, லாபம் சரிந்துவிட்டதாகவும், மலையளவு கடன் அதிகரித்து வருவதாகவும் பிர்லா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|