பதிவு செய்த நாள்
22 நவ2018
23:37
புதுடில்லி : ‘வால்மார்ட்’ நிறுவனத்திற்கு, ‘பிளிப்கார்ட்’ நிறுவன பங்குகளை விற்பனை செய்த வகையில் கிடைத்த வருவாய்க்கு, வரி செலுத்துமாறு, அதன் நிறுவனர்களான, சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலுக்கு, வருமான வரி துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கு, வால்மார்ட் வாங்கியது.இதில், வால்மார்ட் நிறுவனர் சச்சின் பன்சால், தன்னிடம் இருந்த அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, பிளிப்கார்ட்டில் இருந்து வெளியேறினார். பின்னி பன்சால், குறிப்பிட்ட பங்குகளை மட்டும் விற்பனை செய்து, கடந்த வாரம் அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த வகையில், பங்கு விற்பனையில் இவர்கள் பெற்ற மூலதன ஆதாயத்திற்கு, 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.அதில், 75 சதவீத தொகையை, டிச., 15க்குள் முன்கூட்டிய வரியாகவும், எஞ்சிய தொகையை, 2019 மார்ச், 15க்குள் செலுத்த வேண்டும் எனவும், வருமான வரி துறை, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதை செலுத்த தவறினால், 1 சதவீத அபராத வட்டி விதிக்கப்படும் என, வருமான வரி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|