பதிவு செய்த நாள்
25 நவ2018
00:46
புதுடில்லி: பங்குச் சந்தை பட்டியலில், அதிக அளவில் வர்த்தகம் நடைபெறாத சிறிய நிறுவனங்களில், மூலதன ஆதாய வரி ஏய்ப்பு குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பங்கு விற்பனையில், மூலதன ஆதாய வரி செலுத்தாமல் ஏய்க்கும் சிறிய நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை, வருமான வரித் துறை முடுக்கி விட்டுள்ளது.இது தொடர்பாக, ஏற்கனவே, 95 நிறுவனங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தகைய விசாரணைக்காக, எஸ்.ஓ.பி., எனப்படும் ஒரே சீரான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.அதை பின்பற்றி, பெயரளவிற்கு பங்குச் சந்தை பட்டியலில் நுழைந்து, மூலதன ஆதாய வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வருமான வரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய வகையில் திடீரென உயரும் பங்குகள், அவ்வப்போது வர்த்தகம் நடைபெறும் பங்குகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.வரி ஏய்ப்பு தொடர்பாக விளக்கம் கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, டிச., 31க்குள், ‘நோட்டீஸ்’ அனுப்புமாறும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|