ரிசர்வ் வங்கி நிதி தேவையில்லை ரிசர்வ் வங்கி நிதி தேவையில்லை ... முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? ...
அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2018
03:13

புதுடில்லி: மத்­திய அரசு, பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­ம­திக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தின் கீழ், 5 சத­வீத வரிச் சலுகை வழங்­கப்­படும் என, அறி­வித்­துள்­ளதுபாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­மதி, மூன்­றாண்­டு­களில் இல்­லாத வகை­யில், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், முதன் முறை­யாக குறைந்­துள்­ளது. வங்­க­தே­சம் உள்­ளிட்ட முக்­கிய வெளி­நாட்டு சந்­தை­களில், இந்­தி­யா­வின் பாசு­மதி அல்­லாத அரி­சிக்­கான தேவை குறைந்­த­தால், ஏற்­று­மதி சரி­வ­டைந்­துள்­ளது. மேலும், மத்­திய அரசு இந்­தாண்டு, கரீப் பரு­வத்­திற்­கான நெல் கொள்­மு­தல் விலையை, 13 சத­வீ­தம் உயர்த்­தி­ய­தா­லும், அரிசி ஏற்­று­மதி குறைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. கடந்த, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், 22 ஆயி­ரத்து, 968 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 86.50 லட்­சம் டன், பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது. அதில், அண்டை நாடான வங்­க­தே­சத்­திற்கு, 20.28 லட்­சம் டன் அரிசி அனுப்­பப்­பட்­டது. நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – செப்., வரை, 10 ஆயி­ரத்து, 426 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 37.23 லட்­சம் டன் அரிசி ஏற்­று­மதி ஆகி­யுள்­ளது. இது, கடந்த நிதி­யாண்­டின், இதே காலத்­தில், 42.87 லட்­சம் டன்­னாக இருந்­தது.எனவே, பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வரிச் சலுகை வழங்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. இது குறித்த அறிக்­கையை, அன்­னிய வர்த்­தக தலைமை இயக்­கு­ன­ர­கம், அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.அதில், ‘பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­ம­திக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தின் கீழ், 5 சத­வீத வரிச் சலுகை வழங்­கப்­படும். இத்­திட்­டம், நவ., 26 முதல், 2019 மார்ச் 25 வரை அம­லில் இருக்­கும் என, தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது. இதன்­படி, நாளை முதல் அம­லுக்கு வர உள்ள இத்­திட்­டம் மூலம், பாசு­மதி அல்­லாத அரி­சியை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்ப, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் அதிக ஆர்­வ­மு­டன் முன் வரு­வர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
ஊக்­கு­விப்பு திட்­டம் : மத்­திய அரசு, ஏற்­று­ம­தி­யா­ளர்­களை ஊக்­கு­விக்க, 2015ல், எம்.இ.ஐ.எஸ்., என்ற, வர்த்­தக ஏற்­று­மதி மேம்­பாட்டு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதில், பல்­வேறு பொருட்­களின் ஏற்­று­ம­திக்கு வரிச் சலுகை வழங்­கப்­ப­டு­கிறது. ஏற்­று­மதி செய்­யும் நாடு மற்­றும் பொருட்­களை பொறுத்து, 2, 3 மற்­றும் 5 சத­வீத வரிச் சலுகை, ஆவ­ண­மாக வழங்­கப்­படும்.ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், விற்­று­மு­தல் அடிப்­ப­டை­யில் வரிச் சலுகை ஆவ­ணத்தை பெறு­வர். இந்த ஆவ­ணம் மூலம், மூலப் பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு செலுத்த வேண்­டிய வரியை கழித்­துக் கொள்­ள­லாம். அது­போல, ஜி.எஸ்.டி.,க்கும் இதை பயன்­ப­டுத்­த­லாம். கூடு­த­லாக செலுத்­திய வரியை திரும்­பப் பெறும் வச­தி­யும் உள்­ளது.
நல்ல வாய்ப்பு : பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­மதி குறைந்து வரும் நிலை­யில், அதை ஊக்­கு­விக்க, வரிச் சலுகை வழங்­கு­வது வர­வேற்­கத்­தக்­கது. ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். அடுத்த நான்கு மாதங்­களில், அரிசி ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும்.
பி.வி.கிருஷ்ணா, தலை­வர், அரிசி ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கூட்­ட­மைப்பு, காக்­கி­நாடா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)