அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும்அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் ... ... முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி பத்திரங்கள் அளிக்கும் சாதகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
07:00

பொதுவாக வைப்பு நிதி முதலீடு பாதுகாப்பானது என்றாலும், பணவீக்கத்தை மிஞ்ச முடியாதது பாதகமான அம்சமாக அமைகிறது. நிரந்தர பலன் தரும் முதலீடுகளுக்கு இது பொருந்தும். இந்த நிலையில் அதிக ரிஸ்க் எடுக்காமல், பணவீக்கத்தை விட கூடுதலான பலன் பெற வழி செய்யும் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வழி செய்கின்றன.

ரிசர்வ் வங்கி, இன்பிலேஷன் இண்டெக்ஸ்டு நேஷனல் சேவிங்ஸ் செக்யூரிடிஸ் – குமுலேட்டிவ் (ஐ.ஐ.என்.எஸ்.எஸ்-., – சி) எனும் பத்திரங்களை வழங்குகிறது. இவற்றின் மீது நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்க அளவை விட கூடுதலாக, 1.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது.இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு, 1.5 சதவீத வட்டி அளிக்கப்படும். அப்போதைய பணவீக்க அளவை விட இது கூடுதலாக இருக்கும். பணவீக்க அளவிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும் என்றாலும், அது, 1.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்காது.

அரையாண்டு அடிப்படையில் இந்த வட்டி, கூட்டாக முதிர்வின் போது அளிக்கப்படும். டி.டீ.எஸ்., இல்லை எனினும் வரி பொருந்தும்.தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், நன்கொடை அமைப்புகள் உள்ளிட்டவை இதில் முதலீடு செய்யலாம். தனிநபர்கள் குறைந்தபட்சம், 5,000 ரூபாய் மற்றும் அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அமைப்புகள் எனில், 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

முன்கூட்டியே விலக்கி கொள்ளலாம் என்றாலும் இதற்கு வட்டியில் சிறிது அபராதம் பிடித்துக்கொள்ளப்படும். மூத்த குடிமக்கள், ஓராண்டில் விலக்கி கொள்ளலாம், மற்ற நபர்கள் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பத்திரங்கள் மீது கடன் பெறும் வசதியும் அளிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி இணையதளத்தில் இந்த பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)