பதிவு செய்த நாள்
26 நவ2018
07:06
இந்திய பங்குச் சந்தையில், ஒரு மாத உயர்வுக்குப் பின், கடந்த வாரம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ மற்றும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ சரிவை சந்தித்தன. நிப்டி, 200 புள்ளிகள் சரிந்தது. முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றதால், இந்த சரிவு ஏற்பட்டது. வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற கோணத்திலும் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டன.
கடந்த வாரம், தொழில்நுட்பம், உலோகம் மற்றும் வங்கித் துறைகளின் குறியீடுகள் முறையே, 4.4 சதவீதம், 4.2 சதவீதம் மற்றும் 2.8 சதவீத சரிவைக் கண்டன. ரியாலிட்டி, மீடியா துறை பங்குகள் விலை உயர்வைக் கண்டன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ௭0.௭௦ ஆக, மூன்று மாத உச்சத்தை கண்டது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏழாவது வாரமாக சரிந்து வருகிறது. இதனால், நாட்டின் இறக்குமதி செலவு குறைந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என்பதால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
பன்னாட்டு நிதியத்தின், அக்., புள்ளிவிபரப்படி, உலகின் அதிக பொருளாதார மதிப்புள்ள நாடுகளில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி, ஆறாவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது; ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டு, 7.4 சதவீதம்; அடுத்த ஆண்டு, 7.8 சதவீதமாக இருக்கும்.
அடுத்த ஆண்டு, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, 3.9 சதவீதமாக இருக்கும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தை பொறுத்தவரை நிப்டி ரெசிஸ்டென்ஸ், 10,630 மற்றும் 10,710 ஆகும்; சப்போர்ட், 10,420.
கவனிக்க வேண்டிய பங்குகள் :இந்தியன் வங்கி, கே.பி.ஐ.டி., கன்சாய் நெரோலக், ஐ.டி.சி.,இன்போ எட்ஜ்
–முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|